பனிமூட்டம்: 25 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து - 5 பேர் பலி, 30 பேர் காயம்
டெல்லி: டெல்லியில் வரலாறு காணாத கடும் பனிமூட்டத்தினால் யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் 25க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். 30 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் தலைநகரான டெல்லியில் வரலாறு காணாத கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் சிம்லாவை விட டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை பதிவானது. நேற்று காலையிலும் கடும் பனிமூட்டம் நிலவியது. சாலைகளில் செல்லும் வாகனங்கள் தெளிவாக காண முடியவில்லை.

யமுனா விரைவுச்சாலையில் நேற்று காலையில் 'பெல்' நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகள் சிலர் இன்னோவா காரில் சென்று கொண்டிருந்தனர். கொண்டிருந்தது. விரைவுச்சாலை என்பதால் அச்சாலையில் போகும் வாகனங்கள் வேகமாக செல்வது வழக்கம். அப்போது அதிகாரிகளை ஏற்றச்சென்ற இன்னோவா கார் திடீரென்று பேருந்து ஒன்றின் மீது திடீரென மோதியது.
இதில் அந்த கார் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் வந்த 'பெல்' நிறுவன பொது மேலாளர் ஆர்.என். சின்கா, அந்நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளான ஏ.கே. தாஸ், பிரதீப், சோப்னா பிங்கி ஆகியோர் படுகாயமடைந்தார். இந்த காருக்கு பின் வந்த டிரக் ஒன்று கவிழ்ந்திருந்த கார் மீது மோதியது. டிரக்குக்கு பின் அதிவேகத்தில் வந்த 25க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.
இந்த மோசமான விபத்தில் மேலும் பலர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி ஆர்.என். சின்கா, தாஸ் மற்றும் மேலும் மூவரும் உயிரிழந்தனர். இவ்விபத்தில் படுகாயமடைந்த மேலும் 30 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மோசமான விபத்து காரணமாக யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் பிற்பகல் வரை போக்குவரத்து முடங்கியது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications