குஜராத் கப்பல் உடைக்கும் தளத்தில் தீ விபத்து: 5 பேர் பலி
காந்திநகர்: கப்பல் உடைக்கும் தளத்தில் காஸ் கசிவால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்த பரிதாப சம்பவம் குஜராத் மாநிலத்தில் நடந்துள்ளது.
குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் அலங் என்ற இடத்தில் கப்பல் உடைக்கும் தளம் இயங்கிவருகிறது. இப்பகுதியில் இன்று திடீரென பெரிய சத்தத்துடன் ஏதோ வெடித்தது. அதில் இருந்து கிளம்பிய தீயில் சிக்கிய கப்பல் உடைப்பு பணியாளர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 7 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
கப்பல் உடைக்கும் பகுதியில் காஸ் மூலமாக கட்டிங் செய்யப்படுவது வழக்கம். எனவே காஸ் கசிவால்தான் இந்த விபத்து நடந்திருக்கும் என்று தெரிகிறது.
இதை உறுதி செய்யும் விதமாக போலீசார் கூறுகையில், காஸ் கசிவு காரணமாக இந்த விபத்து நடந்துள்ளதாக முதல்கட்ட தகவலில் தெரியவந்ததாக தெரிக்கின்றனர். இருப்பினும் காரணத்தை உறுதி செய்ய தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். ஆய்வு அறிக்கை கிடைத்தபிறகு விபத்துக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications