லாலு மீதான தீவன ஊழல் வழக்கின் 17 ஆண்டுகால பயணம்!
டெல்லி: ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவரும் பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவை சிறைக்கு அனுப்பி வைத்திருக்கும் தீவன ஊழல் வழக்கு விசாரணை 17 ஆண்டுகாலம் நடைபெற்றுள்ளது.

1996 ஜனவரி
பீகார் துணை ஆணையாளர் அமீத் காரே, கால்நடை அமைச்சக அலுவலகங்களில் நடத்திய ரெய்டில்தான் தீவனத்தின் பெயரில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது.

1996 மார்ச்
1996ஆம் ஆண்டு மார்ச் 11-ந் தேதி மாட்டுத் தீவன ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.

1996 மார்ச்
1996ஆம் ஆண்டு மார்ச் 27-ந் தேதி சிபிஐ முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது.

1997 ஜூன்
1997ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23-ந் தேதி இந்த வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் லாலுவின் பெயர் இடம்பெற்றது.

சரண்
1997ஆம் ஆண்டு ஜூலை 30-ந் தேதி சிபிஐ நீதிமன்றத்தில் லாலு சரண் அடைந்தார். பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

குற்றச்சாட்டுகள் பதிவு
2000ஆம் ஆண்டு ஏப்ரல் 5-ந் தேதி சிபிஐ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

ஜார்க்கண்ட்டுக்கு மாற்றம்
ஜார்க்கண்ட் தனி மாநிலம் உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து மாட்டுத் தீவன ஊழல் வழக்குகள் ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு மாற்றப்பட்டன./

விசாரணை தொடக்கம்
2002ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சிபிஐ நீதிமன்றம் விசாரணையை தொடங்கியது.

லாலு முறையீடு
தம் மீதான வழக்கை விசாரிக்கும் நீதிபதியை மாற்றக் கோரி உச்சநீதிமன்றத்தில் லாலு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

தீர்ப்பு ஒத்திவைப்பு
2013ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ந் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது.

இன்று தீர்ப்பு
பீகார் முன்னாள் முதல்வர்கள் லாலு பிரசாத், ஜெகநாத் மிஸ்ரா உட்பட 45 பேர் இன்று குற்றவாளிகள் என்று சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications