பாஜகவில் இணைந்தார் முன்னாள் ராணுவத் தலைமைத் தளபதி வி.கே.சிங்
டெல்லி: முன்னாள் ராணுவத் தலைமைத் தளபதி வி.கே.சிங் இன்று முறைப்படி பாஜகவில் இணைந்து கொண்டார். கட்சியில் சேர்ந்த வேகத்தில் பாஜகவை அவர் வெகுவாகப் பாராட்டிப் பேசியுள்ளார்.
ராணுவத் தலைமைத் தளபதியாக இருந்தபோது சிங், வயது குறித்த சர்ச்சையில் சிக்கினார். இதனால் அவருக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும் இடையே மோதலும் வெடித்தது. வழக்குகளும் தொடரப்பட்டன.
இந்த நிலையில் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார் சிங். அதன் பின்னர் அவர் பாஜகவில் சேரப் போவதாக தகவல்கள் வெளியாகின. டெல்லி அருகே நடந்த நரேந்திர மோடி கூட்டத்திற்கும் அவர் வந்திருந்தார்.

இந்த நிலையில் இன்று முறைப்படி அவர் பாஜகவில் இணைந்து கொண்டார். பாஜக தலைமை அலுவலகம் சென்று கட்சியில் இணைந்த சிங்கை, மாலை போட்டு வரவேற்றார் கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்.
முன்னதாக இந்தியா கேட்டில் உள்ள அமர்ஜவான் ஜோதி நினைவிடத்திற்குச் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் சிங். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நாட்டுக்குத் தொடர்ந்து சேவையாற்ற விரும்புகிறேன். இதனால்தான் நான் பாஜகவில் இணைந்தேன்.
ராணுவத்திலிருந்து வரும் அனைவருக்குமே நாட்டுப் பற்றும், நாடு குறித்த சிந்தனையும்தான் இருக்கும். நானும் எனது நாட்டுக்காக தொடர்ந்து சேவையாற்றப் போகிறேன். தேசியவாத சிந்தனையும், உணர்வும் மிக்க கட்சியில் நான் இணைந்துள்ளேன். நாட்டை இந்தக் கட்சியின் மூலமாக முன்னெடுத்துச் செல்லப் போகிறேன் என்றார்.
சரி, எம்.பி தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு, எனக்குத் தெரியாது. கட்சியே அதுகுறித்து முடிவெடுக்கும் என்றார் சிங்.
2102ம் ஆண்டு மே மாதத்தில் பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications