தின்பண்டத்தில் ரப்பர் பொம்மை... தெரியாமல் விழுங்கிய சிறுவன் பலி - ஆந்திராவில் சோகம்
திண்பண்ட பாக்கெட்டில் இருந்த ரப்பர் பொம்மையை தவறுதலாக விழுங்கிய சிறுவன் உயிரிழந்தான்
கோதாவரி: ஆந்திராவில் ரிங்க்ஸ் எனும் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட தின்பண்டத்தில் இருந்த ரப்பர் பொம்மையை விழுங்கிய 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஏளூரு பகுதியைச் சேர்ந்த சிறுவன் நிரக்ஷன்குமார். நான்கு வயதாகும் சிறுவன் நிரக்ஷனுக்கு அவனது தந்தை அருகில் உள்ள கடையில் நொறுக்குத் தீனி பாக்கெட் வாங்கி கொடுத்து இருக்கிறார்.

பாக்கெட்டில் அடைக்கப்பட்ட அந்த கவரில், இருந்த சிறிய ரப்பர் விளையாட்டு பொம்மையை, தின்பண்டம் என்று நினைத்து தவறுதலாக அந்த சிறுவன் அதை விழுங்கி இருக்கிறான்.
உடனடியாக, மூச்சு விட முடியாமல் சிரமப்பட்ட அவனை உறவினர்கள் மருத்துவமனைக்கு பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர்.
மயங்கிய நிலையில் இருந்த சிறுவன் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அந்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
தற்போது நொறுக்குத் தீனி பாக்கெட்டுகளில் குழந்தைகளைக் கவர்வதற்காக சிறிய அளவிலான பொம்மைகள் இலவசமாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. ரப்பர் பொம்மையே குழந்தையின் உயிரை குடித்து விட்டது என்பது ஆந்திராவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications