வாக்குப்பதிவில் வெடித்த வன்முறை.. மத்திய அமைச்சர் கார் மீது தாக்குதல்.. மேற்கு வங்கத்தில் ஒரே அடிதடி
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் அசன்சூல் தொகுதியில் தேர்தல் தொடர்பாக காலை முதல் வன்முறை தொடர்ந்து வருகிறது.
நாடு முழுக்க 71 தொகுதிகளில் இன்று லோக்சபா தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலம், அசன்சூல் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு வாக்குச் சாவடிகளுக்கு பாஜக ஆதரவு வாக்காளர்கள் செல்ல திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் அனுமதிப்பதில்லை என கூறப்படுகிறது. பாஜக பூத் ஏஜென்ட்களையும், வெளியேற்றியுள்ளனர்.

இதனால் இரு தரப்புக்கும் நடுவே ஆங்காங்கு மோதல்கள் ஏற்பட்டன. இந்த நிலையில் சிட்டிங் எம்பியும், மத்திய இணை அமைச்சருமான, பாபுல் சுப்ரியோ (பாஜக), தனது காரில் அங்கு வருகை தந்தார். அப்போது அவரது கார் கல் வீசி தாக்குதலுக்கு உள்ளானது.
இதில், அவரது காரின் பின்பகுதியில் கண்ணாடி உடைந்தது. இதுகுறித்து பாபுல் சுப்ரியோ கூறுகையில், விரும்பும் வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுக்கிறார்கள். எங்கள் பூத் ஏஜென்ட்டுகளை வெளியே விரட்டியுள்ளனர். ஆனால் நான் ஜனநாயக உரிமையை நிலைநாட்ட இங்கே வந்துள்ளேன்.
West Bengal: BJP MP candidate from Asansol, Babul Supriyo's car vandalised in Asansol. A TMC polling agent says, there is no BJP polling agent here. pic.twitter.com/kBNmpXCvPD
— ANI (@ANI) April 29, 2019
மத்திய படைகள் பாதுகாப்பு வழங்குங்கள், நாங்கள் ஓட்டுப்போட தயார் என மக்கள் கூறுகிறார்கள். எனவே நான் மத்திய படைகளுடன் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் நேரில் செல்கிறேன். மமதா பானர்ஜி கட்சியினர்தான் இந்த வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஒரு தரப்பு மக்கள் வாக்களிக்க வர விரும்புவதும், மற்றொரு தரப்பு அதை அனுமதிக்காமல் தடுப்பதுமாக இருப்பதால், தொகுதி முழுக்க பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications