சர்வதேச வான்வழி தடத்தில் இம்பாலும் இடம்பெற்றது! மியான்மரிலிருந்து விமான சேவை இயக்கம்!!
இம்பால்: மணிப்பூர் தலைநகர் இம்பாலும் தற்போது சர்வதேச வான்வழி தடத்தில் இடம்பிடித்துள்ளது. மியான்மர் நாட்டில் இருந்து முதல் முறையாக இம்பாலுக்கு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் விமான நிலையம் உள்நாட்டு விமான நிலையமாகவே இருந்து வந்தது. பொதுவாக டெல்லி, கொல்கத்தா, குவஹாத்தி ஐஸ்வால் ஆகிய இடங்களில் இருந்துதான் இம்பாலுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

மணிப்பூர் மாநிலத்தின் எல்லையோர நாடாக மியான்மர் இருந்து வருகிறது. இருப்பினும் இதுவரை சாலைவழியாகத்தான் மியான்மர் நாட்டில் இருந்து மணிப்பூர் வழியே இந்தியாவுக்கு சரக்குப் போக்குவரத்து நடைபெற்று வந்தது.
இந்நிலையில் தற்போது மியான்மர் நாட்டின் மண்டலாய் நகரில் இருந்து 166 பேருடன் முதலாவது சர்வதேச விமானம் நேற்று இம்பால் வந்தடைந்தது. இந்த விமான சேவையை கோல்டன் மியான்மர் என்ற தனியார் நிறுவனம் இயக்குகிறது.
இம்பாலில் நடைபெறும் மணிப்பூர் -ஷாங்காய் சுற்றுலா விழாவை முன்னிட்டு இந்த விமான சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக இம்பால் வந்த சர்வதேச விமானத்தில் மியான்மரின் மண்டலாய், ஷகாய்ங் மாகாண முதல்வர்கள், இந்திய தூதரக அதிகாரிகள், மியான்மர் தமிழ் பயணிகள் உட்பட 166 பேர் இம்பால் வருகை தந்தனர். அவர்களை மணிப்பூர் முதல்வர் இபோபி மற்றும் மாநில அமைச்சர்கள் வரவேற்றனர்.
மியான்மர் மாகாண முதல்வர்களை மோரே தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சேகர் மற்றும் ஏராளமான அமைப்புகளின் பிரமுகர்களும் வரவேற்றனர். மோரே தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தமிழர் பாரம்பரிய முறையிலான பொன்னாடை அணிவித்து வரவேற்கப்பட்டது.
இந்த விமான சேவை மூலம் இதுவரை தரைவழியாக நடைபெற்று வந்த சரக்கு போக்குவரத்து சேவை எளிதாகி இருப்பதுடன் இருநாடுகளிடையேயான வர்த்தகம் பன்மடங்கு அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications