கொரோனா விவரங்கள்: ஏன் மறைக்கனும்? உண்மையான நிலவரத்தை சொல்லனும்- குஜராத் பாஜக அரசை விளாசிய ஹைகோர்ட்
அகமதாபாத்: கொரோனா பாதிப்பு தொடர்பான விவரங்களை மறைக்காமல் உண்மையான நிலவரத்தை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று குஜராத் மாநில அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாட்டில் அதிவேகமாக கொரோனா பரவும் மாநிலங்களில் ஒன்றாக குஜராத் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. குஜராத் மாநிலத்தில் எந்த அடிப்படை மருத்துவ வசதிகளும் இல்லாத சூழ்நிலையில் கொரோனா பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது

ஒரே நாளில் 97 பேர் பலி
குஜராத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 97 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 9,541 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. குஜராத்தின் அகமதாபாத், சூரத் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் அனைத்தும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ளன.

பாஜக அரசு மீது அதிருப்தி
இந்த நிலையில் குஜராத் மாநில அரசு கொரோனா பிரச்சனையை சரியாக கையாளவில்லை; கொரோனா தொடர்பான புள்ளி விவரங்களை மறைத்து வருகிறது என அம்மாநில உயர்நீதிமன்றத்தில் பல பொதுநலன் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. குஜராத் உயர்நீதிமன்றமும் தாமே முன்வந்து வழக்கு பதிவு செய்தும் விசாரிக்கிறது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் ஏற்கனவே குஜராத் மாநில பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளன.

விளாசிய ஹைகோர்ட்
இதனிடையே குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம்நாத், பார்கவ் கரியா ஆகியோர் நேற்று விசாரணையின் போது, குஜராத் மாநில அரசு கொரோனா பரிசோதனை விவரங்களை பகிரங்கப்படுத்த வேண்டும். இவற்றை பகிரங்கமாக வெளியிடுவதற்கு ஏன் வெட்கப்பட வேண்டும்? கொரோனா தொடர்பான உண்மையா நிலவரம் மக்களுக்கு தெரிய வேண்டும்.

மறைப்பதால் ஆதாயம் இல்லை
கொரோனா தொடர்பான உண்மையான விவரங்களை மறைப்பதால் மாநில அரசுக்கு எந்த ஒரு ஆதாயமும் கிடையாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் குஜராத் அரசு நேர்மையாக- வெளிப்படைத்தன்மையாக நடந்து கொள்வது கட்டாயம். இதுவரை மாநில அரசு கொடுத்த தகவல் துல்லியமானவையாகவும் இல்லை என விமர்சித்தனர்.
-
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications