அர்பன் நக்சல்களுக்கு மோடி வார்னிங்! துப்பாக்கி, பேனா தூண்டிவிடும் நக்சல் தீவிரவாதத்தை அழிப்போம்!
சூரஜ்கண்ட்: துப்பாக்கி மற்றும் பேனாவால் தூண்டிவிடப்படும் நக்சல் தீவிரவாதத்தை வேரோடு அழிப்போம் என்று பிரதமர் மோடி அர்பன் நக்சல்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஹரியானாவின் சூரஜ்கண்ட்டில் நடைபெற்ற 2 நாள் மாநிலங்களின் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி இது தொடர்பாக பேசியதாவது: பயங்கரவாதத்தின் அடிப்படை கட்டமைப்பை நாம் ஒழிக்க வேண்டும். ஒவ்வொரு மாநில அரசும் அதன் சொந்தத் திறனுடனும், புரிதலுடனும் தங்கள் பங்கைச் செய்ய முயற்சிக்கின்றன.
தயாராக இருந்த 'ஹிட்லிஸ்ட்’! துப்பாக்கி பட பாணியில் துப்பு துலக்கிய போலீஸ்! கோவையின் ஸ்லீப்பர் செல்?
நக்சல் தீவிரவாதம்
அனைத்து மாநிலங்களும் ஒன்று கூடி நிலைமையைக் கையாள்வது காலத்தின் தேவை.துப்பாக்கி அல்லது பேனாவால் தூண்டிவிடப்படும் நக்சல் தீவிரவாதத்தின் ஒவ்வொரு வடிவமும், நாட்டின் இளைஞர்களை தவறாக வழிநடத்துவதைத் தடுக்க, அவை வேரோடு அழிக்கப்பட வேண்டும். வரும் தலைமுறையினரின் மனதை சிதைக்கும் வகையில் இதுபோன்ற சக்திகள் தங்களது அறிவுத் துறையை அதிகரித்து வருகின்றன.
நக்சல் பாதிப்பு குறைவு
தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்காகவும், நம் நாட்டில் இதுபோன்ற சக்திகள் வளர அனுமதிக்க முடியாது. இத்தகைய சக்திகளுக்கு சர்வதேச அளவில் கணிசமான உதவி கிடைக்கின்றன. கடந்த எட்டு ஆண்டுகளில், நாட்டில் நக்சல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.
மத்திய அரசு தீவிரம்
ஜம்மு-காஷ்மீர் அல்லது வடகிழக்கு மாநிலங்கள் என எதுவாக இருந்தாலும், இன்று நாம் நிரந்தர அமைதியை நோக்கி வேகமாக நகர்கிறோம். இப்போது நாம் உள்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் விரைவான வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். இன்று, எல்லை மற்றும் கடலோரப் பகுதிகளில் மாற்றுக் குடியேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
கடலோர மாநிலங்கள்
இந்த பிராந்தியங்களில் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலை நிறுத்துவதில் இது நீண்ட தூரம் செல்ல முடியும். இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு எல்லை மற்றும் கடலோர மாநிலங்களின் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும். பல ஆண்டுகளாக டிஜிபி மாநாடுகளில் இருந்து கிடைத்த ஆலோசனைகளை தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும். காவல்துறை வாகனங்கள் செயல்திறனுடன் தொடர்புடையது என்பதால் அவை ஒருபோதும் பழையதாக இருக்கக்கூடாது. இந்த சிந்தனை அமர்வில், சிறந்த ஆலோசனைகளுடன் கூடிய வழிமுறை வகுக்கப்படும் என நான் உறுதியாக கருதுகிறேன். உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.