தீவிரவாதிகள் உணவு வாங்கி கொடுத்தனர், கண்ணியமாக நடந்தனர்: நர்ஸுகள் பேட்டி
கொச்சி: தீவிரவாதிகள் எங்களுக்கு உணவு வாங்கி கொடுத்தனர், கண்ணியமாக நடந்தனர் என்று ஈராக்கில் இருந்து நாடு திரும்பிய 46 நர்ஸுகள் தெரிவித்துள்ளனர்.
ஈராக்கில் அரசுக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் போராடி வருவதால் அங்கு சிக்கியுள்ள இந்தியர்கள் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் உதவியுடன் நாடு திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில் திக்ரித் நகரில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிந்த கேரளா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 46 நர்ஸுகள் நாடு திரும்பியுள்ளனர்.

பயம்
தீவிரவாதிகள் எங்களை அழைத்துச் சென்றபோது பயந்து நடுங்கினோம். இனி நான் என் வாழ்நாளில் ஈராக் பக்கமே போக மாட்டேன் என்று சான்ட்ரா செபாஸ்டியன் என்ற நர்ஸ் தெரிவித்தார்.

தீவிரவாதிகள்
கடந்த வியாழக்கிழமை துப்பாக்கி ஏந்திய ஆண்கள் மருத்துவமனைக்குள் வந்து 15 நிமிடத்திற்குள் எங்களின் உடைமைகளை எடுத்துக் கொண்டு வெளியே நிற்கும் பேருந்தில் ஏறுமாறு கூறினர். நாங்கள் வெளியேறிய சில நிமிடங்களி்ல் மருத்துவமனையின் முதல் மற்றும் 3வது மாடி தீப்பிடித்து எரிந்ததை பார்த்தோம் என்று கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த சீமா என்ற நர்ஸ் தெரிவித்தார்.

அன்பு
தீவிரவாதிகள் எங்களை கொலை செய்யப் போகிறார்களா இல்லையா என்பது தெரியாமல் இருந்தோம். 8 மணிநேரம் பயணம் செய்து மொசுல் நகரை அடைந்தபோது அவர்களின் அன்பான நடவடிக்கை எங்களை அதிசயிக்க வைத்தது. அவர்கள் வாகனத்தை பல இடங்களில் நிறுத்தி எங்களுக்கு தண்ணீர், பிஸ்கட் மற்றும் உணவு வாங்கி கொடுத்தனர். அவர்களின் நடவடிக்கையை பார்த்த பிறகே எங்களுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. ஆனால் டிரைவர் மற்றுமொரு நபரிடம் துப்பாக்கி இருந்தது என்று மற்றொரு நர்ஸ் தெரிவித்தார்.

கண்ணியம்
நாங்கள் பெண்கள் என்பதால் தீவிரவாதிகள் எங்களை ஒன்றும் செய்யாமல் கண்ணியமாக நடந்து கொண்டனர் என்று தூத்துக்குடியைச் சேர்ந்த நர்ஸ் மோனிஷா தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications