தீவிரவாதிகள் உணவு வாங்கி கொடுத்தனர், கண்ணியமாக நடந்தனர்: நர்ஸுகள் பேட்டி
கொச்சி: தீவிரவாதிகள் எங்களுக்கு உணவு வாங்கி கொடுத்தனர், கண்ணியமாக நடந்தனர் என்று ஈராக்கில் இருந்து நாடு திரும்பிய 46 நர்ஸுகள் தெரிவித்துள்ளனர்.
ஈராக்கில் அரசுக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் போராடி வருவதால் அங்கு சிக்கியுள்ள இந்தியர்கள் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் உதவியுடன் நாடு திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில் திக்ரித் நகரில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிந்த கேரளா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 46 நர்ஸுகள் நாடு திரும்பியுள்ளனர்.

பயம்
தீவிரவாதிகள் எங்களை அழைத்துச் சென்றபோது பயந்து நடுங்கினோம். இனி நான் என் வாழ்நாளில் ஈராக் பக்கமே போக மாட்டேன் என்று சான்ட்ரா செபாஸ்டியன் என்ற நர்ஸ் தெரிவித்தார்.

தீவிரவாதிகள்
கடந்த வியாழக்கிழமை துப்பாக்கி ஏந்திய ஆண்கள் மருத்துவமனைக்குள் வந்து 15 நிமிடத்திற்குள் எங்களின் உடைமைகளை எடுத்துக் கொண்டு வெளியே நிற்கும் பேருந்தில் ஏறுமாறு கூறினர். நாங்கள் வெளியேறிய சில நிமிடங்களி்ல் மருத்துவமனையின் முதல் மற்றும் 3வது மாடி தீப்பிடித்து எரிந்ததை பார்த்தோம் என்று கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த சீமா என்ற நர்ஸ் தெரிவித்தார்.

அன்பு
தீவிரவாதிகள் எங்களை கொலை செய்யப் போகிறார்களா இல்லையா என்பது தெரியாமல் இருந்தோம். 8 மணிநேரம் பயணம் செய்து மொசுல் நகரை அடைந்தபோது அவர்களின் அன்பான நடவடிக்கை எங்களை அதிசயிக்க வைத்தது. அவர்கள் வாகனத்தை பல இடங்களில் நிறுத்தி எங்களுக்கு தண்ணீர், பிஸ்கட் மற்றும் உணவு வாங்கி கொடுத்தனர். அவர்களின் நடவடிக்கையை பார்த்த பிறகே எங்களுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. ஆனால் டிரைவர் மற்றுமொரு நபரிடம் துப்பாக்கி இருந்தது என்று மற்றொரு நர்ஸ் தெரிவித்தார்.

கண்ணியம்
நாங்கள் பெண்கள் என்பதால் தீவிரவாதிகள் எங்களை ஒன்றும் செய்யாமல் கண்ணியமாக நடந்து கொண்டனர் என்று தூத்துக்குடியைச் சேர்ந்த நர்ஸ் மோனிஷா தெரிவித்தார்.
-
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க












Click it and Unblock the Notifications