100 % மக்களுக்கு தடுப்பூசி .. அந்தமான் நிக்கோபார் சாதனை...!
போர்ட் பிளேர்: இந்தியாவிலேயே மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதன்முறையாக கோவிஷீல்டு மூலம் 100% தடுப்பூசி செலுத்தியுள்ளதாக அந்தமான் நிக்கோபார் நிர்வாகம் கூறியுள்ளது.
அந்தமான் நிக்கோபார் தீவுகள் வசிக்கும் மக்களுக்கு 100 சதவீத இரண்டு டோஸ் கோவிட் 19 தடுப்பூசி அளித்து இலக்கை அடைந்துள்ளதாகவும், இந்த சாதனையும் கோவிஷீல்டு தடுப்பூசியை மட்டும் பயன்படுத்தி சாதனை படைத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இதுவே முதன்மையானது என கூறப்பட்டுள்ளது.

உலகின் தொலைதூரப் பகுதிகளில் ஒன்றான அந்தமான் நிக்கோபார் தீவில் அசாதாரண சாதனையை சமாளிக்க முடியாத முரண்பாடுகளை சமாளித்து இந்த சாதனையை எட்டியுள்ளதாக அந்தமான் நிக்கோபார் நிர்வாகம் கூறியுள்ளது.
வடக்கிலிருந்து தெற்காக 800 கிலோ மீட்டருக்கு மேல் பரவியுள்ள 836 தீவுகளில் கரடுமுரடான கடல், மிகவும் அடர்ந்த காடு, மலைகள் மற்றும் சீரற்ற காலநிலைகளால் பிரிக்கப்பட்டுள்ள இந்த தீவுகளில் தடுப்பூசி போடுவது மிகவும் சவாலானது எனவும், அதனையும் இந்த மீறி தீவுகளின் நிர்வாகம் இச்சாதனையை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தடுப்பூசி இயக்கம் இந்த ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி அன்று மற்ர இடங்களில் தொடங்கப்பட்டது போலவே தொடங்கியது. இந்நிலையில் சுகாதார அறிக்கையின்படி 2.86 லட்சம் பயனாளிகளுக்கு தடுப்பூசி போட இலக்கு வைக்கப்பட்டிருந்த நிலையில் 2.87 லட்சம் பேர் covid-19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுள்ளனர். இது 100.4 1 சதவீத தடுப்பூசி வெற்றிக்கு வழிவகுத்த நிலையில் தீவுகளில் மொத்த மக்கள் தொகையில் 74.67 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
Recommended Video
இதற்கிடையில் ஞாயிற்றுக்கிழமை அந்தமான் நிக்கோபார் தீவுகளில் மொத்த் கொரொனா வைரஸ் பாதிப்பு 7201 ஆக உயர்ந்தது. ஒருவருக்கு மட்டும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் உட்பட 7 ஆயிரத்து 570 பேர் நோயிலிருந்து மீண்டு உள்ளனர் என அந்தமான் நிக்கோபார் நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது












Click it and Unblock the Notifications