தமிழகத்தில் இவ்வளவு பேருக்கு டெங்கு காய்ச்சலா?.. பீதி கிளப்பும் மத்திய அரசின் புள்ளி விவரம்!
தமிழகத்தில் கடந்த 7 மாதத்தில் 5 ஆயிரத்து 474 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.
சென்னை : தமிழகத்தில் இந்த ஆண்டில் மட்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டு களைவிட, இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலின் தீவிரம் அதிகரித்துள்ளது. பெரும்பாலும் மழைக் காலங்களில்தான் அதிகம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்தனர். ஆனால் தற்போது மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே டெங்குவின் பாதிப்பு அதிகம் காணப்படுகிறது. கடந்த 7 மாதத்தில் மட்டும் டெங்கு காய்ச்சலால் 5 ஆயிரத்து 474 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில் தெரிய வந்துள்ளது.
2017ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் ஜூலை 30-ம் தேதி வரையிலான 7 மாதத்தில் தமிழகத்தில் மட்டுமே 5,474 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் இறப்பு விகிதம் என்பது குறைந்துள்ளது. டெங்குவால் பாதிக்கப்பட்டு ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக மத்திய அரசின் புள்ளிவிவரம் கூறுகிறது.

கேரளா ஃபர்ஸ்ட், தமிழகம் இரண்டாமிடம்
நாடு முழுவதும் மொத்தம் 28 ஆயிரத்து 792 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 46 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கைகள் கூறுகின்றனர். அதிகபட்சமாக கேரள மாநிலத்தில் 13 ஆயிரத்து 913 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதோடு 23 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவிற்கு அடுத்தபடியாக டெங்குவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம் வகிக்கிறது.

காலநிலைக்கு ஏற்ப மாறும் ஏடிஸ் கொசு
டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் முதலில் மழைக்காலத்தில் மட்டுமே உற்பத்தியாகின. அதனால் மழைக் காலத்தில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகமாக இருந்தது. தற்போது அந்தக் கொசுக்கள் மழை, குளிர் மற்றும் கோடைக்காலத்தில் வாழ்வதற்கு ஏற்ப தங்களை மாற்றி கொண்டுள்ளன.
அதனால்தான் கோடைக்காலத்தில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. பொதுவாக கொசுக்களின் வாழ் நாள் 20 நாட்களாக இருந்தது. ஆனால், தற்போது அது 40 நாட்களாக அதிகரித்துள்ளது.
|
எங்கே உற்பத்தியாகிறது
சிறிய பொருட்களில் தேங்கி யிருக்கும் சுத்தமான தண்ணீரில் உற்பத்தியாகி வந்த ஏடிஸ் கொசுக்கள், தற்போது பெரிய பொருட்கள், தண்ணீர் தொட்டி போன்றவற்றில் உற்பத்தியாகி வருகிறது. மலேரியாவை பரப்பும் அனபிலஸ் கொசுக்களை விரட்டிவிட்டு, அந்த இடங்களை ஏடிஸ் கொசுக்கள் ஆக்கிரமித்து வருகின்றன.

ஆண்டு முழுவதும் நடவடிக்கை தேவை
இதனால் மலேரியா பாதிப்பு குறைந்து, டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மழைக்காலத்தில் மட்டும் எடுக்காமல், ஆண்டு முழுவதும் தமிழக அரசு எடுக்க வேண்டும். அப்போதுதான் டெங்கு காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த முடியும்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications