மனைவியிடம் இருந்து காப்பாற்றுங்கள்.. பெண் நீதிபதி மீது போலீசில் புகார் அளித்த கணவர்!
ஹைதராபாத் : பெண் நீதிபதியாக இருக்கும் தனது மனைவியும், அவரது குடும்பத்தாரும் தன்னைத் துன்புறுத்துவதாக ஆந்திராவில் கணவர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும் மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி அவர் நீதிமன்றத்தையும் நாடியுள்ளார்.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் சாய்நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜித்தேந்திரா. இவருக்கும் ஹைதராபாத் மியாபூர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றும் ஸ்ரீதேவி என்பவருக்கும் கடந்த மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது.
திருமணமான சில நாட்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்த நிலையில், மனைவியைப் பிரிந்தார் ஜிதேந்திரா. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அனந்தபூர் நீதிமன்றம் மூலம் தனது மனைவிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார்.
ஜிதேந்திராவின் முடிவிற்கு ஸ்ரீதேவி மற்றும் அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், நேற்று முன் தினம் மாலை, ஜித்தேந்திரா அனந்தபூர் 2வது காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், ‘திருமணமான ஒரு வாரத்தில் எங்களுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் நான் மனைவியை விட்டு பிரிந்து தற்போது பெற்றோருடன் வசித்து வருகிறேன். விவாகரத்து கோரி அனந்தபூர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். என் மனைவி ஸ்ரீதேவி, அவரது தந்தை வெங்கடேஸ்வருலு, தாயார் அனுராதா மற்றும் அவர்களது குடும்ப நண்பர் சேகர் ஆகியோர் என்னுடைய வீட்டில் புகுந்து என்னையும், எனது பெற்றோரையும் தாக்கினர்.
இதனால் எங்கள் உயிருக்கு பாதுகாப்பில்லை. ஆகவே எங்களுக்கு எனது மனைவியின் குடும்பத்தார் மூலம் ஆபத்து உள்ளது. எனவே, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என ஜிதேந்திரா தெரிவித்துள்ளார்.
இப்புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ












Click it and Unblock the Notifications