வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத 22 லட்சம் பேருக்கு நோட்டீஸ்!
டெல்லி: வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத சுமார் 22 லட்சம் பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருவதாக வருமான வரித் துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்யத் தவறுவோருக்கு எதிரான பிரசாரத்தை வருமான வரித்துறை தொடங்கியுள்ளது. அதன்படி, கணக்கு தாக்கல் செய்யாத சுமார் 22 லட்சம் பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருவதாக வருமான வரித் துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் தாக்கல் செய்வதற்கு அவகாசம் அளித்தும் பிரசாரம் நடைபெறுவதாக அவர்கள் கூறியுள்ளனர். அதோடு, அதிக வருமானம் ஈட்டுவோரில் கணக்கு தாக்கல் செய்யாதவர்களை கணக்கெடுத்து அவர்கள் மீது வழக்கு தொடரவும் வருமான வரித் துறை தயாராகி வருகிறது.
2013-14ஆம் நிதி ஆண்டில் மட்டும் 641 பேர் மீது வழக்கு தொடரப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொதுவாக மாதச் சம்பளம் பெறுவோர், வருமான வரிக் கணக்கை ஜூலை 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வில்லையென்றால் காலதாமதமாக ஓராண்டு வரை கணக்கை தாக்கல் செய்யலாம்.
ஆனால் அதற்கு 234 ஏ பிரிவின் படி அபராதம் செலுத்த வேண்டும். குறைந்தபட்சம் ரூ. 5 ஆயிரம் தொகையை, உரிய நிதி ஆண்டில் செலுத்தத் தவறியதற்காக கட்ட நேரிடும். வருமான வரிக் கணக்கு செலுத்தத் தவறியதற்கு ஏற்கத்தக்க விளக்கத்தை அளித்தால் அந்த அபராதமும் செலுத்தத் தேவையில்லை என்கின்றனர் வருமானவரித்துறை அதிகாரிகள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications