மகாராஷ்டிராவில் பசு பாதுகாவலர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விஷ்வ ஹிந்து பரிஷத்!
பசு பாதுகாவலர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் என மகாராஷ்டிர மாநில விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு தெரிவித்துள்ளது.
மும்பை: மகாராஷ்டிராவில் பசு பாதுகாவலர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் என அம்மாநில விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு தெரிவித்துள்ளது.
மத்தியில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்த மூன்றாண்டுகளில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் இஸ்லாமியர்கள் மற்றும் தலித்துகள் மீது மாட்டிறைச்சி வைத்திருந்தார்கள் என கூறி பல்வேறு வன்முறை சம்பவங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. பிரதமர் மோடியின் குஜராத்தில் உனா என்ற சிற்றூரில் இறந்த மாட்டின் தோலை உரித்தார்கள் என கூறி நான்கு தலித்துகளை கட்டி வைத்து கொடூரமாகத் தாக்கிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை உருவாக்கியது.

உத்தரபிரதேச மாநிலத்தில் முகமது அக்லக் என்பவர் வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்தார் எனக் கூறி அவரை பசு பாதுகாவலர்கள் அடித்தே கொன்றனர். அண்மையில் ரம்ஜான் பண்டிகையின் போது டெல்லியில் ஜூனைத் என்ற சிறுவன் இதே காரணத்துக்காக அடித்துக்கொல்லப்பட்டான்.
இப்படி அத்துமீறி வன்முறையில் ஈடுபடுகிறவர்களைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற காரணத்துக்காக மகாராஷ்டிரா மாநிலத்தில் பசு பாதுகாவலர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் என விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் தலைமையில் பாஜக அரசு ஆட்சி செய்து வருகிறது. முதல்வருடன் பலமுறை ஆலோசித்து இந்த முடிவு எட்டப்பட்டதாக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் நிர்வாகி அஜய் நில்டவார் தெரிவித்துள்ளார்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications