"மீனவர்களை சுட்டுக் கொல்வோம்" பேட்டிக்கு ரணில் வருத்தம் தெரிவித்தார்: ராஜ்யசபாவில் சுஷ்மா
டெல்லி: எல்லை தாண்டி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்வோம் என அளித்த பேட்டிக்கு தம்மிடம் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வருத்தம் தெரிவித்ததாக ராஜ்யசபாவில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்களை சுடுவதற்கு எங்களுக்கு சட்டம் அனுமதி அளித்துள்ளது என்று கூறியிருந்தார். இந்த பேட்டிக்கு தமிழக தலைவர்கள், மீனவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த பிரச்சனை குறித்து ராஜ்யசபாவில் இன்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் விளக்கம் அளித்து பேசியதாவது:
இந்திய மீனவர்களின் நலனை பாதுகாப்பதில் இந்திய அரசுக்கு கடமை உண்டு. மோடி அரசு பொறுப்பேற்ற பிறகு ஒரு மீனவர் கூட சுட்டுக் கொல்லப்படவில்லை.
இந்தியாவில் இலங்கை மீன்வர்களோ இலங்கையில் இந்திய மீனவர்களோ எவரும் சிறையில் இல்லை. பிரதமர் மோடி இலங்கை செல்வதால் இருதரப்பு மீனவர்களிடையேயான பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் எல்லை தாண்டினால் சுடுவோம் என்று பேட்டியளித்தது குறித்து ரணிலிடம் நீண்ட நேரம் பேசினேன். தமிழக மீனவர்கள் குறித்து தாம் அவ்வாறு கூறியிருக்கக் கூடாது என என்னிடம் ரணில் வருத்தம் தெரிவித்தார்.
மோடி இலங்கை செல்லும் நிலையில் இரு தரப்பை உறவு மேம்படுத்துவது குறித்து யோசிக்க வேண்டும் எனவும் ரணிலிடம் கூறினேன்.
இவ்வாறு சுஷ்மா ஸ்வராஜ் கூறினார்.
-
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications