பூடான் எல்லை கிராம மக்கள் வெளியேற ராணுவம் அறிவுறுத்தல்
பூடான் எல்லையில், சர்ச்சைக்குரிய டோக்லம் பகுதியை ஒட்டி வசிக்கும் கிராம மக்களை வெளியேறும்படி, ராணுவத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்.
டெல்லி: பூடான் எல்லையில், சர்ச்சைக்குரிய டோக்லம் பகுதியை ஒட்டி வசிக்கும் இந்திய கிராம மக்களை வெளியேறும்படி, இந்திய ராணுவத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பூடான் அருகே, இந்திய எல்லையை ஒட்டியுள்ள டோக்லம் என்ற இடத்தை, சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளது. எனினும், அதனை மேற்கொண்டு முன்னேறவிடாமல், சீன வீரர்களை, இந்திய ரானுவத்தினர் சுற்றி வளைத்துள்ளனர்.

அங்கிருந்து வெளியேற இந்திய ராணுவமும் மறுத்துவிட்டது. சீனாவும் பலமுறை நேரடியாகவும், மறைமுகமாகவும் மிரட்டல் விடுத்து வருகிறது. இந்நிலையில், எந்நேரமும் போர் வெடிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, டோக்லம் எல்லையை ஒட்டியுள்ள நதாங் கிராமத்தில் வசிக்கும் இந்திய மக்களை, உடனடியாக, வெளியேறும்படி, ரானுவத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர். அவர்கள் வெளியேறினால் அந்த இடத்தை மையமாகக் கொண்டு, இந்திய ராணுவத்தினர் முகாம் ஏற்படுத்தி தீவிர கண்காணிப்பை மேற்கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.
ஏற்கனவே, இதுபற்றி செய்தி ஒன்றை வெளியிட்ட சீன தேசிய ஊடகம், ஒரு பெரிய மோதலுக்கான, கவுன்ட் டவுன் தொடங்கியுள்ளது. இந்தியா தயாராக இருக்கும்படி, எச்சரித்திருந்தது.
இதன் அடிப்படையிலேயே, இந்திய ரானுவமும், போருக்கு தயாராகி வருவதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications