பூடான் எல்லை கிராம மக்கள் வெளியேற ராணுவம் அறிவுறுத்தல்
பூடான் எல்லையில், சர்ச்சைக்குரிய டோக்லம் பகுதியை ஒட்டி வசிக்கும் கிராம மக்களை வெளியேறும்படி, ராணுவத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்.
டெல்லி: பூடான் எல்லையில், சர்ச்சைக்குரிய டோக்லம் பகுதியை ஒட்டி வசிக்கும் இந்திய கிராம மக்களை வெளியேறும்படி, இந்திய ராணுவத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பூடான் அருகே, இந்திய எல்லையை ஒட்டியுள்ள டோக்லம் என்ற இடத்தை, சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளது. எனினும், அதனை மேற்கொண்டு முன்னேறவிடாமல், சீன வீரர்களை, இந்திய ரானுவத்தினர் சுற்றி வளைத்துள்ளனர்.

அங்கிருந்து வெளியேற இந்திய ராணுவமும் மறுத்துவிட்டது. சீனாவும் பலமுறை நேரடியாகவும், மறைமுகமாகவும் மிரட்டல் விடுத்து வருகிறது. இந்நிலையில், எந்நேரமும் போர் வெடிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, டோக்லம் எல்லையை ஒட்டியுள்ள நதாங் கிராமத்தில் வசிக்கும் இந்திய மக்களை, உடனடியாக, வெளியேறும்படி, ரானுவத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர். அவர்கள் வெளியேறினால் அந்த இடத்தை மையமாகக் கொண்டு, இந்திய ராணுவத்தினர் முகாம் ஏற்படுத்தி தீவிர கண்காணிப்பை மேற்கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.
ஏற்கனவே, இதுபற்றி செய்தி ஒன்றை வெளியிட்ட சீன தேசிய ஊடகம், ஒரு பெரிய மோதலுக்கான, கவுன்ட் டவுன் தொடங்கியுள்ளது. இந்தியா தயாராக இருக்கும்படி, எச்சரித்திருந்தது.
இதன் அடிப்படையிலேயே, இந்திய ரானுவமும், போருக்கு தயாராகி வருவதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications