உ.பி.யில் கொடூரம்: எய்ட்ஸ் பாதித்த கர்ப்பிணியை அசிங்கப்படுத்திய மருத்துவமனை
மீரட்: உத்தர பிரதேசத்தில் உள்ள மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணியின் படுக்கையில் இவர் ஒரு எய்ட்ஸ் நோயாளி என்று மருத்துவமனை நிர்வாகம் பேப்பரில் எழுதி ஒட்டி அவரை அசிங்கப்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்தவர் பூஜா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). நிறைமாத கர்ப்பிணியான அவர் மீரட்டில் உள்ள லாலா லஜ்பத் ராய் நினைவு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 19ம் தேதி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.

அவரது பெட்டில் இவர் ஒரு எய்ட்ஸ் நோயாளி என்று பேப்பரில் எழுதி ஒட்டியதுடன், சிவப்பு ரிப்பனையும் கட்டி வைத்துள்ளனர் டாக்டர்கள். பூஜாவுக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த 3 நாட்கள் கழித்து அவரது ரத்தக் கழிவுகளை அவரையே சுத்தம் செய்ய வைத்துள்ளனர்.
இது மட்டும் அல்லாமல் மேலும் ஒரு எய்ட்ஸ் நோயாளி குழந்தையை உலகிற்கு கொண்டு வந்துவிட்டாயே என்று கூறி மூத்த டாக்டர் ஒருவர் பூஜாவை திட்டியுள்ளார். அவரை பார்க்க மருத்துவமனைக்கு வந்த உறவினர்கள் பெட்டில் எழுதி ஒட்டப்பட்டிருந்த வாசகத்தை பார்த்து திரும்பிச் சென்றனர்.
இது குறித்து அறிந்த எய்ட்ஸ் நோயாளிகளின் உரிமைக்காக போராடும் கேர் சப்போர்ட் சென்டர் என்ற அமைப்பு நிர்வாகிகள் மருத்துவமனைக்கு வந்து அந்த வாசகம் அடங்கிய பேப்பரை கிழித்து எறிந்துவிட்டு மருத்துவமனை நிர்வாகத்தை கேள்வி கேட்டனர். அதன் பிறகு மருத்துவமனை நிர்வாகம் பூஜாவிடம் மன்னிப்பு கேட்டது.
இது பற்றி பூஜா கூறுகையில்,
கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு என் கணவரிடம் இருந்து எனக்கு எய்ட்ஸ் நோய் வந்தது. எனக்கு எய்ட்ஸ் இருக்கும் விஷயத்தை யாருக்கும் தெரியாமல் 8 ஆண்டுகளாக ரகசியமாக வைத்திருந்தேன். தற்போது மருத்துவமனையின் செயலால் அனைவருக்கும் தெரிந்துவிட்டது. அவர்கள் என் குழந்தையைக் கூட பழிக்கிறார்கள் என்று கூறி அழுதார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications