ஓயாத வன்முறை... ஒடுக்க முடியாத மாநில அரசு... காஷ்மீரில் அமலாகிறது ஜனாதிபதி ஆட்சி?
டெல்லி: காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து கலவரம் நடந்து வருவதை கட்டுப்படுத்த மத்திய அரசு சில மாற்றங்களை மேற்கொள்ளப் போவதாக செய்தி வெளியாகியுள்ளது. அங்கு புதிய கவர்னரை நியமிக்கலாம் அல்லது கவர்னர் ஆட்சியை கொண்டு வரலாம் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காஷ்மீர் கலவரத்தைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு அம்மாநில அரசை நிர்பந்தம் செய்து வருகிறது. அவ்வாறு செய்யவில்லை என்றால் காஷ்மீரில் சில மாற்றங்களை செய்யவிருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இம்மாதம் முடிவதற்குள் ஆளும் மெகபூபா அரசு கலவரத்தைக் கட்டுப்படுத்தி அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு கெடுவிதித்துள்ளது.

காஷ்மீரில் தொடரும் கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 2 நாள் பயணமாக காஷ்மீர் சென்றிருந்த போது, போராட்டங்களை கட்டுப்படுத்த மாநில அரசுக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக கூறியிருந்தார்.
எனினும், அமைதியை கொண்டு வர காஷ்மீரில் கவர்னர் ஆட்சியை கொண்டு வருவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாகவும், அதற்கான பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காஷ்மீரில் நிலவி வரும் இதுபோன்ற சூழ்நிலைகளில் மாநில அரசு சாமர்த்தியமாக செயல்பட வேண்டும். அப்படி செயல்படவில்லை என்றால் மத்திய அரசு தலையிட்டு சில மாற்றங்களை கொண்டு வருவது அவசியம் என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இந்த கலவரத்தில் பாகிஸ்தானின் பங்கு இருக்கிறது என்றாலும், காஷ்மீரில் அமைதியை கொண்டு வர மத்திய அரசு மாற்றங்களை செய்தாக வேண்டும் என்று மத்திய அரசு உறுதியுடன் இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications