ஜெ. மேல்முறையீட்டு வழக்கில் மே 12ம் தேதி தீர்ப்பு: பி.வி. ஆச்சார்யா
பெங்களூர்: ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் வரும் மே மாதம் 12ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அரசு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட ஜெயலலிதா ஜாமீனில் வெளியே வந்தார். அவர் தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானி சிங்கை தமிழக அரசு நியமித்தது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை தெரிவித்தது. இதையடுத்து கர்நாடக அரசு பி.வி. ஆச்சார்யாவை அரசு வழக்கறிஞராக நியமித்தது. ஏற்கனவே ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக இருந்த ஆச்சாரியா ஜெயலலிதா தரப்பின் நெருக்கடியால் பதவி விலகினார்.
இந்நிலையில் தற்போது மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ள ஆச்சார்யா நீதிமன்றத்தில் 18 பக்கங்கள் கொண்ட வாதத்தை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்துள்ளார்.
இது குறித்து ஆச்சார்யா கூறுகையில்,
ஜெயலலிதா வழக்கு தொடர்பான எழுத்துப்பூர்வமான வாதத்தை ஒரு நாளில் சமர்பிக்க வேண்டும் என்பதால் அந்த வழக்கு பற்றி நன்கு அறிந்த என்னை அரசு வழக்கறிஞராக நியமித்துள்ளனர். நான் அளித்துள்ள எழுத்துப்பூர்வமான வாதத்தை உயர் நீதிமன்றம் ஏற்கும். இந்த வழக்கில் வரும் மே மாதம் 12ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications