ஜெ. வழக்கில் மேல்முறையீடு செய்ய 10 பாயிண்டுகள்.. கர்நாடகா பக்கா ரெடி!
பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய 10 அம்சங்களை இம்மாநில அட்வகேட் ஜெனரல் ரவிவர்ம குமார் பரிந்துரை செய்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக ஹைகோர்ட் ஜெயலலிதாவை விடுதலை செய்துள்ளது. இந்த விடுதலைக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில், அப்பீலுக்கு செல்லுமாறு கர்நாடக அட்வகேட் ஜெனரல் ரவிவர்ம குமார், மாநில அரசுக்கு 10 அம்ச சிபாரிசு செய்துள்ளார்.

ஆச்சாரியா பச்சைக்கொடி
முன்னதாக அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சாரியாவும், கர்நாடக அரசு மேல்முறையீடு செய்வது அவசியம் என்று கூறியிருந்தார். தீர்ப்பில் கூறப்பட்டுள்ள கணித தவற்றை வைத்தே, தீர்ப்புக்கு இடைக்கால தடை பெற்றுவிடலாம் என்று ஆச்சாரியா கருத்து.

விரைந்து அப்பீல்
இந்நிலையில், அட்வகேட் ஜெனரல் அளித்த சிபாரிசின் சில அம்சங்கள் மீடியாக்களுக்கு தெரியவந்துள்ளது. அந்த சிபாரிசில், கூடிய விரைவில், சுப்ரீம்கோர்ட்டில் கர்நாடகம் அப்பீல் செய்ய வேண்டும் என்றும், தற்போது கோடைவிடுமுறை பெஞ்ச் செயல்படுவதால் அதன்முன்னிலையில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

10 பாயிண்டுகள்
ஹைகோர்ட் வழங்கிய தீர்ப்பில் உள்ள கணித தவறை சுட்டிக் காட்டி, அந்த தவறால்தான் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்பதையும் குறிப்பிட்டுள்ள அட்வகேட் ஜெனரல், கணித தவறு உட்பட மொத்தம் 10 அம்சங்களை முன்னிறுத்தி, இந்த வழக்கு மேல்முறையீட்டுக்கு உகந்தது என்று அட்வகேட் ஜெனரல் ரெகமண்ட் செய்துள்ளாராம். மேலும், அப்பீல் செய்தால்தான், கர்நாடக அரசு, ஊழலுக்கு எதிராக வலிமையான நடவடிக்கை எடுத்தது என்ற தோற்றம் மக்களிடம் ஏற்படும் என்றும் அட்வகேட் ஜெனரல் தனது கருத்தை அதில் பதிவு செய்துள்ளாராம்.

தடை கேட்க வாய்ப்பில்லை
இந்த சிபாரிசுகளை இறுதி செய்து, மேல்முறையீடு தயாரிக்கும் பணியில் கர்நாடக சட்டத்துறை அதிகாரிகள் இறங்கியுள்ளதாக தெரிகிறது. அதேநேரம், அப்பீல் செய்தாலும், கர்நாடக தரப்பில் இருந்து, ஹைகோர்ட் தீர்ப்புக்கு இடைக்கால தடை கேட்கப்படாது என்று தெரிகிறது.
-
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications