மழை வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்களை காக்க Josh app விழிப்புணர்வு பிரச்சாரம்! வீடியோ ரெடியா மக்களே
சென்னை: சென்னை உட்பட, தமிழகத்தில் மழை வெள்ளம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் அது தொடர்பாக விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுத்து உள்ளது ஜோஷ் வீடியோ ஆப் (Josh).
சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மூன்றாவது நாளாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் மழை வெள்ளம் வீடுகளுக்குள் செல்லும் அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டது.

இன்னும் 2 நாட்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது . இது மக்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இப்படிப்பட்ட நிலையில்தான் வெள்ள பாதிப்பிலிருந்து மக்களை தற்காத்துக்கொள்ள ஜோஷ் ஆப் களமிறங்கியுள்ளது. இது தொடர்பான விழிப்புணர்வு வீடியோக்கள் மூலம் Josh app தனது கரத்தை கோர்த்துள்ளது
இவ்வாறான விழிப்புணர்வை ஏற்படுத்தும், நாட்டின் முதலாவது வீடியோ ஆப் செயலி ஜோஷ் செயலிதான் என்பது பெருமைக்குரிய விஷயமாகும். ஜோஷ் ஒரு குறும் வீடியோவுக்கான செயலி மட்டும் கிடையாது. அதன் பயனாளர்களுக்கு எப்போதுமே உதவி செய்ய தயங்கியது கிடையாது.
இந்த இக்கட்டான நேரத்தில் ஜோஷ் செயலி பயனாளர்கள் பொது மக்களுக்கு உதவும் வகையிலான, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வீடியோக்களை உருவாக்கி வீடியோ தளத்தில் பதிவேற்றம் செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .இதுபோன்ற வீடியோக்களுக்காக #StaySafeChennai என்ற ஹேஷ்டேக் வழங்கப்பட்டுள்ளது. இந்த வீடியோக்களை இந்த ஹேஷ்டேக் பயன்படுத்தி வெளியிடும் போது அது பலருக்கும் பலனைக் கொடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
சென்னை வெள்ள பாதிப்புகளுக்கான அவசரகால தொலைபேசி எண்ணான 1913 என்பதையும் வீடியோவை உருவாக்கும் பயனர்கள் இணைத்துக் கொண்டால், அது பார்ப்பவர்களுக்கு பலன் தரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.











Click it and Unblock the Notifications