இப்படியே போனால் நாட்டில் ஜனநாயகம் நிலைக்காது.. சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பரபரப்பு பேட்டி
இந்திய வரலாற்றில் முதல் முறையாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் இணைந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கிறார்கள்.
Recommended Video

டெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் இணைந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கிறார்கள். அதில் கடந்த சில மாதங்களாக நாட்டில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்கிறது என்று கூறியுள்ளனர்.
இந்திய வரலாற்றில் முதல் முறையாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் இணைந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கிறார்கள். இதில் உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக நீதிபதிகள் புகார் அளித்து உள்ளனர்.

செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய் ஆகியோர் அடங்கிய நான்கு பேர் இந்த பேட்டியை அளித்துள்ளனர். நீதி துறையில் கடந்த சில மாதங்களாக விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்கிறது என்று அவர்கள் கூறியுள்ளனர்.
தலைமை நீதிபதிக்கு எவ்வளவு கடிதம் எழுதியும் பதில் இல்லை என்று கூறியுள்ளனர். எங்கள் கவலைகளை நாட்டிற்கு கூற விரும்புகிறோம் என்று குறிப்பிட்டு இருக்கின்றனர்.
செய்தியாளர்களிடம் பேசுவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. நாங்கள் உச்ச நீதிமன்றத்தையும் , நீதி துறையையும் பாதுகாக்க விரும்புகிறோம் என்றும் குறிப்பிட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications