மீண்டும் அடாவடி.. காவிரி மேலாண்மை வாரியம் தேவையில்லையாம்.. கர்நாடக அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு
பெங்களூர்: காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி நடுவர்மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. தமிழகத்திற்கு வழங்கும் காவிரி நீர் அளவு 177.25 டிஎம்சியாக குறைக்கப்பட்டது. ஆனால், தமிழகத்திற்கு சாதகமான ஒரு அம்சமும் உள்ளது.

அதாவது, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதற்கு ஏற்கனவே கர்நாடகா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், காவிரி மேலாாண்மை வாரியம் அமைக்க கூடாது என்று, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது தொடர்பாக இன்று முதல்வர் சித்தராமையா தலைமையில் கர்நாடக அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
இதில் பாஜகவை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், மதசார்பற்ற ஜனதாதள கட்சியை சேர்ந்த சட்டசபை மற்றும் மேலவை குழு தலைவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் பேசிய சித்தராமையா, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் முடிவுக்கு சம்மதம் இல்லை என்று அனைத்துக் கட்சியினரும் கருத்து தெரிவித்தனர். இதையேற்று சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.
உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்கு பதிலடியாக கர்நாடக அனைத்து கட்சி கூட்டத்தில் இவவாறு முடிவு செய்யப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் எந்த உத்தரவையும் கர்நாடகா மதிப்பதில்லை என்பது கவனிக்கத்தக்கது.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட்












Click it and Unblock the Notifications