காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது- கண்காணிப்புக் குழுவிடம் கர்நாடகா #cauvery
டெல்லி: காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது என்று கண்காணிப்புக் குழுவிடம் கர்நாடகா அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி நீரை திறந்துவிட வேண்டும் என்று செப்டம்பர் 12-ந் தேதி நடைபெற்ற கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் தமிழகம் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அப்போது தமிழகமும் கர்நாடகாவும் கடந்த 9 ஆண்டுகால நீர் இருப்பு, பகிர்வு விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று கண்காணிப்புக் குழு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் டெல்லியில் இன்று கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. மத்திய நீர்வளத்துறை செயலாளர் சசிசேகர் தலைமையிலான இக்கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநில தலைமைச் செயலர்கள் பங்கேற்றனர்.
இன்றைய கூட்டத்தில் கர்நாடகா அரசு தரப்பில் தமிழகத்துக்கு இனியும் நீரை தர முடியாது என்று திட்டவட்டமாக அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், தமிழகத்துக்கு இதுவரை 13 டிஎம்சி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கர்நாடகாவின் 4 அணைகளில் 27 டி.எம்.சி நீர் மட்டுமே உள்ளது.
அடுத்த ஆண்டு ஜூலை வரை கர்நாடகாவுக்கு குடிநீருக்கு 21 டிஎம்சி நீர் தேவை. கர்நாடகாவில் 18% மழை குறைவாக பெய்துள்ளது. ஆகையால் தமிழகத்துக்கு இனியும் நீரை திறந்துவிட முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications