காவிரியில் தமிழகத்திற்கான ஜூலை மாத பங்கை திறந்து விடுங்கள்.. கர்நாடகாவிற்கு ஆணையம் அதிரடி உத்தரவு
ஜூலை மாதத்திற்காக தமிழகத்திற்கு 34 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Recommended Video

டெல்லி: காவிரியில் தமிழகத்திற்கான ஜூலை மாத பங்கை திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முதல் காவிரி ஆணைய கூட்டம் டெல்லியில் நடந்து முடிந்துள்ளது. ஆணையத்தின் தலைவர் மசூத் ஹூசைன் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. தமிழக பிரதிநிதியான பொதுப்பணி முதன்மை செயலாளர் பிரபாகர் கூட்டத்தில் பங்கேற்றார்.

மேலும் திருச்சி மண்டல நீர்வளத் துறை தலைமை பொறியாளர் செந்தில்குமார் கூட்டத்தில் கலந்து கொண்டார்.இதில் தமிழக அரசு மிக முக்கியமான சில கோரிக்கைகளை வைத்தது. கடந்த மாதம் போலவே கர்நாடக அரசு தொடர்ந்து நீர் திறக்க ஆணைய கூட்டத்தில் வலியுறுத்தியது.
ஜூலை-ஆகஸ்ட்டில் 80 டிஎம்சி நீரை கர்நாடகா திறக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இதில் ஜூலையில் மட்டும் 34 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்.
இந்த காவிரி ஆணைய கூட்டம் சுமார் 4 மணி நேரம் நடைபெற்றது.இதில் தமிழக அரசின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்படி தமிழகத்திற்கு இந்த ஜூலை மாதத்திற்கான தண்ணீர் பங்கை திறந்துவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் ஆணையிட்டுள்ளது.
அதன்படி ஜூலை மாதம் 31.24 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் நேற்று முடிவாகி உள்ளது. ஆனால் நேரடியாக இத்தனை டிஎம்சி திறக்க வேண்டும் ஆணையம் அறிவிப்பு வெளியிடவில்லை. வெறுமனே இந்த ஜூலை மாதத்திற்காக நடுவண் நீதிமன்றம் பிறப்பித்த தண்ணீர் அளவை திறந்துவிட வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது.
முறைப்படி ஜூலை மாதத்திற்காக தமிழகத்திற்கு 34 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால் ஜூன் மாதம் வழங்க வேண்டிய நீரை விட அதிக நீரை கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. இதனால் ஜூலை மாதம் 31.24 டிஎம்சி திறக்க வேண்டும் என்று முடிவாகி உள்ளது.
ஆகஸ்ட் மாதத்திற்கான தண்ணீர் குறித்து அடுத்த மாத கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இனி இரண்டாவது கூட்டம் அடுத்த மாதம் கூடும் என்று கூறப்படுகிறது.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications