வெள்ளத்தில் மிதக்கிறது கேரளா.. 29 பேர் பலி.. 53,000 பேர் முகாம்களில் தங்க வைப்பு
Recommended Video

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பலத்த மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளால் இதுவரை சுமார் 29 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..

தென்மேற்கு மழை கடந்த 3 நாட்களாக கடும் தீவிரம் கொண்டதன் காரணமாக கேரளாவில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த மழையின் பாதிப்பு மலையோர கர்நாடக மாவட்டங்களிலும் கூட எதிரொலிதாலும், கேரளாவில் இதன் பாதிப்பு மிக அதிக அளவில் உள்ளது. 53 ஆயிரத்து 500 பேர் தங்கள் வீடுகளில் இருந்து பாதுகாப்பான முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ராணுவம், கடற்படை இணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வெள்ளப் பாதிப்புகளால் 29 பேர் பலியாகி உள்ள நிலையில் முதல்வர் பினராயி விஜயன் இன்று வெள்ளச்சேதம் பாதித்த இடங்களில் நேரில் ஆய்வு செய்தார். அதிகப்படியாக வயநாட்டில் 8 பேர் பலியாகியுள்ளனர். முதல்வர் பினராயி விஜயன் இன்று, இடுக்கி, ஆலப்புழா, எர்ணாகுளம், வயநாடு, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஹெலிகாப்டர் மூலம் வெள்ள சேத நிலையை ஆய்வு செய்தார்.

-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி












Click it and Unblock the Notifications