கேரளாவில் கைதிகளுக்கும் ஆதார் அட்டை... சிறைத்துறையினர் முடிவு!
கேரளாவில் சிறைக்கைதிகளுக்கும் ஆதார் அட்டை வழங்கும் விதமாக அவர்களின் தகவல்களை பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் : நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு தனித்தனியான அடையாளம் என்ற வகையில் அறிவிக்கப்பட்ட ஆதார் அட்டையின் கீழ் சிறைக்கைதிகளையும் கொண்டு வர கேரள சிறைத்துறை முடிவு செய்துள்ளது. இதனால் கேரளாவில் சிறைக்கைதியாக இருந்தாலும் எளிதில் ஆதார் அட்டை பெற முடியும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. வயது வித்தியாசம் மற்றும் சமுதாயத் தடைகள் எதுவும் இன்றி அனைவரும் ஆதார் அட்டை வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டு வருகிறத. இந்நிலையில் சிறைக்கைதிகளுக்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தண்டனை பெற்று சிறையில் இருக்கும் கைதிகளின் விவரங்களை சேகரித்து அவர்களுக்கென தனித் தனி ஆதார் அட்டைகளை வழங்க கேரள அரசு திட்டமிட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக 3,500 தண்டனை நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆதார் அட்டைகளை பெறுவதற்கான செயல்பாடுகளில் இறங்கியுள்ளது.
பல்வேறு மாநில சிறைகளில் தண்டனை பெற்ற கைதிகளுக்கும் தனித்தனி ஆதார் எண் வழங்கப்படும் பட்சத்தில் எதிர்காலத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும் எளிமையாக இருக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாநில சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கைதிகளின் ஆதார் எண்ணை பதிவு செய்து வைத்துக் கொண்டு அவர்கள் விடுதலையான பின்பும் கூட அவர்களைப் பற்றி தொடர்ந்து கண்காணிக்க இது உதவியாக இருக்கும் என்பது சிறைத்துறை அதிகாரிகளின் திட்டமாக உள்ளது.
கேரளாவில் உள்ள சிறைகளில் இந்தப் பணி கடந்த வாரமே தொடங்கிவிட்டது. திருவனந்தபுரத்தில் உள்ள பூஜப்புரா மத்திய சிறையில் நடத்தப்பட்ட ஆதார் முகாமில் 27 கைதிகளின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. சிறையில் ஆதார் இல்லாத கைதிகளின் விவரங்கள் எடுக்கப்பட்டு அவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
கேரளா சிறைகளில் உடள்ள 8 ஆயிரம் கைதிகளின் விவரங்களை முதலில் பதிவு செய்ய திட்டமிடப்பட்டள்ளது. கேரளாவில் மொத்தம் 3 மத்திய சிறைகள், 11 மாவட்ட சிறைகள், 16 சப் ஜெயில்கள், 3 மகளிர் சிறை உள்ளன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications