குபீரென்று கிளம்பிய குரங்கு காய்ச்சல்.. தவிக்கும் கேரளா.. இந்த அறிகுறிகள் இருக்கா? உஷார் மக்களே!
வயநாடு: கேரளாவில் கொரோனா பாதிப்பு இன்னும் முடிவுக்கு வராத நிலையில் தற்போது குரங்கு காய்ச்சல் பரவ துவங்கியுள்ளது. வயநாட்டில் 24 வயது நபர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்த மாநில சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
கேரளாவில் பறவைக்காய்ச்சல், எலி காய்ச்சல், குரங்கு காய்ச்சல் உள்பட வெவ்வேறு வகையான காய்ச்சல்கள் அவ்வப்போது பொதுமக்களை தாக்கும். இதனால் எப்போதும் அந்த மாநில சுகாதாரத்துறை விழிப்பாக இருக்கும்.
இந்த நிலையில் தற்போது கேரளாவில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:

வயநாடு மாவட்டம்
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம், திருநெல்லி ஊராட்சியில் பானவல்லி பழங்குடி கிராமம் உள்ளது. இங்கு மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் 24 வயது நிரம்பியவர் உடல்நலம் பாதிக்கப்பட்டார். அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

சிகிச்சை
இதையடுத்து அவர் மானந்தவாடி மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபரின் உடல்நலம் நன்றாக உள்ளது. தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்படுவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுபற்றி வயநாடு மாவட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் சீனா கூறுகையில், ‛‛இது சீசன் வகை காய்ச்சல் தான். இந்தியாவின் தெற்கு பகுதிகளில் மலையையொட்டிய பகுதிகளில் பரவும். தற்போது வரை ஒருவர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளார். வேறு யாருக்கும் பாதிப்பு கண்டறியப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பயப்பட வேண்டாம்.''

ஏற்கனவே எச்சரிக்கை
மேலும் சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‛‛மாநிலத்தில் சில இடங்களில் குரங்கு காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளதாக ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது பாதிப்பு உறுதியானதால் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என்றார். மேலும் ‛‛2022ல் மாநிலத்தில் பதிவான முதல் குரங்கு காய்ச்சல் பாதிப்பு இதுவாகும். இந்த காய்ச்சலை பரப்பும் வைரஸ் பிளவிவிர்டே குடும்பத்தை சேர்ந்தது'' எனவும் அவர் தெரிவித்தார்.

கொரோனா குறையாத நிலையில்...
கேரளா இன்னும் கொரோனா 3ம் அலையில் இருந்து மீளவில்லை. தினசரி 18 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் பாதிக்கப்படுவதோடு, தொடர்ந்து பலிகளும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான் குரங்கு காய்ச்சல் ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இது அந்த மாநில அரசுக்கும், சுகாதாரத்துறைக்கும் தலைவலியை ஏற்படுத்துவதாக உள்ளது. இதனால் குரங்கு காய்ச்சல் மேற்கொண்டு பரவாமல் தடுப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குரங்கு காய்ச்சலின் அறிகுறிகள்
குரங்கு காய்ச்சலின் சில பொதுவான அறிகுறிகள்: உடல் வெப்பநிலையில் திடீர் அதிகரிப்பு, அல்லது குளிருடன் கூடிய காய்ச்சல், தலைவலி, தசை வலி, சோர்வு, முதுகு வலி, வீங்கிய கணுக்கள், சளியுடன் கூடிய அல்லது வறட்டு இருமல் ஆகியவை குரங்கு காய்ச்சல் அறிகுறிகளாக
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications