காங்கிரஸ் வெற்றியை பறித்த ஐஏஎஸ் அதிகாரி! பாஜக ஏஜென்டாக செயல்பட வேண்டாம் என கடுகடுத்த உயர்நீதிமன்றம்
போபால்: மத்திய பிரதேசத்தில் பஞ்சாயத்து துணை தலைவர் தேர்தலில் தோல்வியடைந்த பாஜக வேட்பாளருக்காக மறுதேர்தல் நடத்தி வெற்றி பெற செய்த ஐஏஎஸ் அதிகாரியை மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் கடுமையாக கண்டித்தது. பாஜகவின் ஏஜென்டாக செயல்பட வேண்டாம் எனக்கூறிய நீதிமன்றம் அவரை தேர்தல் அதிகாரி பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என கூறியுள்ளது.
பாஜக ஆளும் மாநிலமாக மத்திய பிரதேசம் உள்ளது. முதல்வராக சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் மத்திய பிரதேச மாநிலத்தில் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றது.
மாநகாட்சி, நகராட்சி, பஞ்சாயத்து என அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. இதையடுத்து ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

தலைவர்-துணை தலைவர் தேர்தல்
அதன்பிறகு மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பஞ்சாயத்துகளின் தலைவர், துணை தலைவர் தேர்தல் நடைபெற்றன. இதில் காங்கிரஸ், பாஜகவினர் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. பன்னா மாவட்டம் குன்னூர் ஜன்பத் பஞ்சாயத்தில் மொத்தம் 25 உறுப்பினர்கள் உள்ள நிலையில் தலைவர், துணைதலைவர் தேர்வு செய்யும் தேர்தல் கடந்த மாதம் 27 ம் தேதி நடந்தது.

மாற்றப்பட்ட வெற்றி
இந்த பஞ்சாயத்தில் துணை தலைவருக்கான தேர்தலில் காங்கிரஸ் ஆதரவு வேட்பாளர் பர்மானந்த் ஷர்மா 25 வாக்குகளில் 13 வாக்குகளை பெற்றார். இவரை எதிர்த்து களமிறங்கிய ஆளும் பாஜக ஆதரவு வேட்பாளர் 12 வாக்குகள் பெற்று ராம்ஷிரோமணி மிஸ்ரா தோல்வியடைந்தார்.இதையடுத்து பர்மானந்த் ஷர்மாவுக்கு தலைமை தேர்தல் அதிகாரி வெற்றி சான்று வழங்கினார். இதனை எதிர்த்து பன்னா கலெக்டர் சஞ்சய் மிஸ்ராவிடம், ராம்ஷிரோமணி மிஸ்ரா சார்பில் தேர்தல் முடிவு தொடர்பாக மனு மூலம் முறையிட்டார். இதில் முறைகேடு நடந்ததாக கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து தேர்தல் முடிவை கலெக்டர் ரத்து செய்தார். மறுநாள் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் குலுக்கல் முறையில் ராம்ஷிரோமணி மிஸ்ராவை வெற்றி பெற்றதாக கலெக்டர் சஞ்சய் மிஸ்ரா அறிவித்தார்.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், மாவட்ட கலெக்டர் ஆளும் பாஜக அரசுக்கு சாதகமாக செயல்படுவதாக குற்றம்சாட்டினார். மேலும், துணை தலைவராக ராம்ஷிரோமணி மிஸ்ரா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர் பர்மானந்த் ஷர்மா மத்திய பிரதேச மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
Recommended Video

கடிந்து கொண்ட நீதிபதி
இந்த வழக்கு நீதிபதி விவேக் அகர்வால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி விவேக் அகர்வால் கடும் வார்த்தைகளை பயன்டுத்தி கடிந்து கொண்டார். நீதிபதி விவேக் அகர்வால் கூறுகையில், ‛‛மாவட்ட கலெக்டராக உள்ள ஐஏஎஸ் அதிகாரி தேர்தல் அதிகாரியாக செயல்படும் வேளையில் ஒரு அரசியல் கட்சியின்(மறைமுகமாக பாஜக) ஏஜெண்டாக செயல்பட்டுள்ளார். இவர் தேர்தல் அதிகாரியாக செயல்பட தகுதியற்றவர். இதனால் அந்த பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட வேண்டும். இயற்கையான நீதி, கொள்கையை பின்பற்றாத கலெக்டரை அந்த பதவியில் இருந்து நீக்க வேண்டும்''என கடிந்து கொண்டார்.
-
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications