Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆளில்லாத போது வீட்டுக்கு வந்த கணவனின் நண்பன்.. கதறிய மனைவி.. எல்லாம் போச்சு.. லாடம் கட்டிய போலீஸ்

Subscribe to Oneindia Tamil

காந்திநகர்: குஜராத்தில் தன்னுடைய கணவரின் நண்பர்தானே என்று நம்பி வீட்டுக்குள் சேர்த்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குஜராத்தின் அகமதாபாத் அருகே உள்ள ராம்தேவ் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் குறித்து அப்பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் கணவரின் நண்பரான குஜ்ஜர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது. "இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை(18) நடந்திருக்கிறது. குற்றம்சாட்டப்பட்டுள்ள குஜ்ஜர், பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரின் நண்பராவார்.

 நண்பனின் மனைவி

நண்பனின் மனைவி

இவர் கணவர் பானிப்பூரி விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் இவரை சந்திப்பதற்காக குஜ்ஜர் அடிக்கடி இவர்கள் வீட்டுக்கு வந்துள்ளார். அதேநேரத்தில் தொழில் குறித்தும் புதிய புதிய ஆலோசனைகளை கொடுத்திருக்கிறார். சில நேரங்களில் பண உதவியும் செய்துள்ளார். இவ்வாறு கொடுக்கப்பட்ட பணம் குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பி கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்படி இருக்கையில் ஞாயிற்றுக்கிழமையன்று மாலை குஜ்ஜர் இவர்களது வீட்டிற்கு சென்றிருக்கிறார். இவர் போன நேரம் பார்த்து இவரின் நண்பர் வீட்டில் இருந்திருக்கவில்லை. நண்பனின் மனைவி இவரை அழைத்து என்ன விஷயம் என்று கேட்டிருக்கிறார். இவர் விஷயம் ஏதும் இல்லையென்றும், தன்னுடைய நண்பர் எங்கே எனவும் கேட்டிருக்கிறார்.

பாலியல் பலாத்காரம்

பாலியல் பலாத்காரம்

அவர் வெளியில் சென்றுள்ளதாக நண்பனின் மனைவி கூறவே இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று திட்டம் தீட்டியுள்ளார். சும்மா வெறுமென பேசுவதைப்போல பேச்சு கொடுத்து பின்னர் அப்பெண்மணி சமையல் அறையில் நுழைந்தவுடன் அங்கு சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து யாரிடமாவது சொன்னால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து அவர் தப்பி ஓடியுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத அப்பெண்மணி அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார். அவரது கணவர் திரும்ப வந்த நிலையில் வீடு தலைக்கீழாக மாறி இருந்திருக்கிறது. இது குறித்து விசாரிக்கையில் அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் தனது மனைவியுடன் சென்று ஆனந்த்நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கைது

கைது

புகாரையடுத்து குஜ்ஜார் மீது பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் ராம்தேவ் நகரிலிருந்து தப்பி சென்றுவிட்டார். அவரை தேடும் பணியில் காவல்துறையினர் களமிறக்கப்பட்டனர். அவருடன் நெருங்கிய நண்பர்களிடம் விசாரித்ததில் மொரையாவில் உள்ள அவரது சொந்த ஊருக்கு சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து எங்கள் குழு மொரையாவுக்கு விரைந்தது. அங்கு அவரது வீட்டில் பதுங்கி இருந்த குஜ்ஜரை நாங்கள் கைது செய்தோம். சம்பவம் தொடர்பாக ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தற்போது சிறையில் அடைத்துள்ளோம்.

விசாரணை

விசாரணை

இந்த குற்றத்திற்கான நோக்கம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். நண்பரின் மனைவி மீதான மோகத்தில் இதை செய்தாரா அல்லது தொழில் ரீதியாக பழிவாங்க இதனை செய்தாரா? என்பது குறித்து விசாரித்து வருகிறோம். அதேபோல இவருக்கு பின்னணியில் யாரேனும் இருக்கிறார்களா? என்றும் சந்தேகம் எழுந்துள்ளது" என காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை குறைக்க பெண்களை போக பொருளாக காட்சிப்படுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று மகளிர் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+