ரூபாய் நோட்டுல காந்திய காணோம்! - ஏடிஎம்மில் பணம் எடுத்தவர் அதிர்ச்சி
மத்திய பிரதேசத்தில் ஏடிஎம்மில் பணம் எடுத்தவரின் ரூபாய் நோட்டில் காந்தியின் உருவம் இல்லாமல் இருந்ததால் அதிர்ச்சியடைந்தார்.
மொரேனா : மத்திய பிரதேசத்தில் ஏடிஎம்மில் எடுத்த பணத்தில் காந்தியின் உருவம் அச்சிடாமல் வெளிவந்தது அந்தப் பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மொரேனா பகுதியை சேர்ந்த கோவர்தன் ஷர்மா என்பவர் எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் 2 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்துள்ளார். ஏடிஎம் மெஷினில் இருந்து வெளியே வந்த நான்கு 500 ரூபாய் நோட்டுகளை பார்த்த கோவர்தன் அதிர்ச்சியடைந்துள்ளார். ஏனெனில் 500 ரூபாய் நோட்டுகள் எதிலுமே காந்தியின் உருவம் அச்சிடப்படவில்லை, இதனால் தன்னிடம் இருப்பது நல்ல நோட்டா கள்ள நோட்டா என்று பதறியுள்ளார் கோவர்தன்.

இதனையடுத்து எஸ்பிஐ வங்கி அதிகாரிகளுக்கு ஏடிஎம்மில் எடுத்த பணம் குறித்து புகார் அளிக்க இதற்கு அதிகாரிகள் கோவர்தன் கையில் இருப்பது நல்ல நோட்டு தான் என்றும், பிரிண்டிங் கோளாறு காரணமாக காந்தியின் உருவம் அச்சடிக்காமல் விடுபட்டிருக்கும் என்றும் கூறியுள்ளது. மேலும் காந்தியின் உருவம் இல்லாத ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
கடந்த 25ம் தேதி மத்திய பிரதேசத்தின் ஷேப்பர் பகுதியில் இதே போன்று ஏடிஎம்மில் எடுக்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் தாள்கள் காந்தியின் உருவம் அச்சிடப்படாமல் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. ஏடிஎம்மில் வரும் ரூபாய் தாள்களே மகாத்மா காந்தியின் உருவம் அச்சிடப்படாமல் இருப்பதால் எது உண்மையான ரூபாய் நோட்டு, எது கள்ள நோட்டு என்று தெரிந்து கொள்ள முடியாமல் குழம்பியுள்ளனர் மக்கள். ஆனால் வங்கிகளோ பிரிண்டிங் கோளாறு என்று சர்வசாதாரணமாக கூறுகின்றன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications