என்னைக் கொல்ல பாகிஸ்தான் கூலிப்படையை ஏற்பாடு செய்தார் மணிசங்கர் அய்யர்... பிரதமர் மோடி பகீர்!
தன்னை கொலை செய்ய மணிசங்கர் அய்யர் பாகிஸ்தான் கூலிப்படையை ஏற்பாடு செய்ததாக பிரதமர் மோடி பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.
Recommended Video

காந்திநகர்: தன்னை கொலை செய்ய மணிசங்கர் அய்யர் பாகிஸ்தான் கூலிப்படையை ஏற்பாடு செய்ததாக பிரதமர் மோடி பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.
குஜராத் சட்டசபைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டன. அப்போது பிரதமர் மோடி ஒரு இழிபிறவி எனக்கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார் அக்கட்சியின் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர்.

கட்சியிலிருந்து நீக்கம்
இதற்காக அவரை கட்சியில் இருந்து கட்சி தலைமை நீக்கியுள்ளது. இதுதொடர்பாக அவரிடம் கட்சி மேலிடம் விளக்கமும் கேட்டுள்ளது.

மணிசங்கர் அய்யர் குறித்து
இந்நிலையில் குஜராத்தின் வடக்குப்பகுதியில் உள்ள பாபர் என்ற இடத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.அப்போது பேசிய அவர், தன்னை பற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் பேசியதை நினைவு கூர்ந்தார்.

என்னையா உங்களையா?
அவர் என்னை அவதூறாக பேசினாரா இல்லை உங்களையா? என மக்களை பார்த்து கேட்ட பிரதமர் மோடி, என்னை அவதூறாக பேசினாரா இல்லை குஜராத்தை அவதூறாக பேசினாரா? கேட்டார். மேலும் அவர் இந்தியாவின் கலாசார சமூகத்தை அவதூறாக பேசினாரா, இல்லை என்னை அவதூறாக பேசினாரா? என்றும் மக்களை பார்த்து கேட்டார்.

மக்கள் பார்த்துக்கொள்வார்கள்
அவர் தவறாக பேசியதுபற்றி நாம் இப்போது பேச வேண்டாம் என்ற அவர் அதை குஜராத் மக்கள் பார்த்துக்கொள்வார்கள் என்றும் பிரதமர் மோடி கூறினார். இதற்கான அவர்கள் வரும் 18-ந் தேதி முடிவை தெரிந்து கொள்வார்கள் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

பிரதமர் மோடி குற்றச்சாட்டு
மேலும் மணிசங்கர் அய்யர் குறித்து பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றையும் கூறினார். அதாவது தான் பிரதமராக பதவி ஏற்ற பிறகு, மணிசங்கர் அய்யர் பாகிஸ்தானுக்கு சென்றார் என்றும் அங்கு சில பாகிஸ்தானியர்களை சந்தித்து மோடியை அகற்றாத வரையில், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவில் முன்னேற்றம் ஏற்படாது என்று கூறி இருக்கிறார் என்றும் தெரிவித்தார்.

கூலிப்படையை அமர்த்த விரும்பினார்
இவை அனைத்தும் சமூக ஊடகங்களில் உள்ளது என்ற மோடி தன்னை கொல்வதற்கு மணிசங்கர் அய்யர் கூலிப்படையை அமர்த்த விரும்பினார் என்றும் குற்றம்சாட்டினார். இதற்காக மக்கள் கவலைப்படவேண்டாம் என்ற பிரதமர் மோடி தன்னை தெய்வம் காத்துக்கொண்டிருப்பதாக கூறினார்.

மூடி மறைத்த காங்கிரஸ்
3 ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தானில் இந்த பேச்சுவார்த்தை நடந்துள்ளது என்றும் இதனை மறைப்பதற்கு காங்கிரஸ் கட்சி முயற்சித்தது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக அவர் மீது கட்சி தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மோடி குற்றம்சாட்டினார்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
ஆடிப்போன அமெரிக்கா! சத்தமின்றி பாகிஸ்தான் செய்த காரியம்.. ஈரான் போருக்கு நடுவே இது வேறயா -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா!












Click it and Unblock the Notifications