இன்னும் ஓராண்டில் ஆளில்லா லெவல் கிராசிங் இருக்க கூடாது.. அமைச்சர் பியூஷ் கோயல் அதிரடி உத்தரவு
டெல்லி: ரயில்வே துறையில் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் உயர்மட்ட அளவிலான ஆலோசனையை நடத்தினார்.
பாதுகாப்புதான் முதல் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் அந்த ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தினார். மேலும், ஆளில்லா லெவல் கிராசிங், ரயில் தடம் புரள்வது உள்ளிட்ட 5 பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் என்று அப்போது அமைச்சர் வலியுறுத்தினார்.

3 வருடங்களுக்குள் இப்பணிகளை முடிக்க வேண்டும் என்ற பழைய இலக்கை மாற்றியமைத்த பியூஷ் கோயல், இவற்றை இன்னும் ஓராண்டுக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தார்.
இந்த ஆலோசனை கூட்டத்தின்போது, ரயில்வே பாதுகாப்பு குறித்த முழு பிரசன்டேசன் காண்பிக்கப்பட்டது.
விபத்துகளுக்கான காரணங்கள் குறித்து இந்த கூட்டத்தில் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது.
இரு முக்கிய விஷயங்கள்தான் விபத்துகளுக்கு காரணம் என்பது ஆலோசனை கூட்டத்தில் கண்டறியப்பட்டது.
1) 2016-17ல் ஆளில்லாத லெவல் கிராசிங் மூலமாகத்தான் சுமார் 34 சதவீத விபத்துகள் நடந்துள்ளன.
2) ரயில்வே பாதைகளில் ஏற்படும் பிரச்சினைகள்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் இவ்விரண்டு பிரச்சினைகளை தீர்ப்பது குறித்து அதிக கவனம் செலுத்தி ஆலோசிக்கப்பட்டது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள்:
1) இன்னும் ஓராண்டுக்குள் நாட்டில் ஆளில்லா லெவல் கிராசிங் இல்லை என்ற நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். இத்திட்டத்தை நிறைவேற்றற முன்பு நிர்ணயிக்கப்பட்டு இருந்த 3 வருட கால கெடு ஓராண்டாக குறைக்கப்படுகிறது.
2) தண்டவாள மாற்றம், சீரமைப்பு உள்ளிட்டவை வேகமாக நடைபெற வேண்டும்.
3) புதிய ரயில் பெட்டிகளை அதிக அளவு வாங்குவதில் துரிதம் காட்ட வேண்டும்.
4) வழக்கமான ஐசிஎப் மாதிரி உருவாக்கத்திலான ரயில் பெட்டிகள் தவிர்க்கப்பட்டு, பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த LHB வகை ரயில் பெட்டிகளைத்தான் வாங்க வேண்டும்.
5) பனிக்காலத்திலும் வெளிச்சம் தரக்கூடிய எல்இடி லைட்டுகளைத்தான் இன்ஜின் முகப்பில் மாட்ட வேண்டும்.
இவ்வாறு அந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications