For Daily Alerts
Just In
பத்மநாபசுவாமி கோவிலுக்கு 53 கோடி ரூபாய் செலவில் “மாடர்ன்” பாதுகாப்பு!
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள பத்மநாபசாமி கோவிலில் பொக்கிஷங்களைப் பாதுகாக்க 53 கோடி ரூபாய் செலவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோவில் உள்ள ரகசிய அறைகளில் பல லட்சம் கோடி மதிப்பிலான நகைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனை பாதுகாக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதனையடுத்து கமாண்டோ படையினர் பத்மநாபசாமி கோவிலில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.
இந்நிலையில் தற்போது புதியதாக சுமார் 53 கோடி செலவில் கோவிலை சுற்றிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு அறைகள் , தொலை தொடர்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை கேரள மாநில முதல்வர் உம்மன் சாண்டி முறைப்படி துவக்கி வைத்தார்.
Comments
English summary
Home Minister Ramesh Chennithala inaugurated the upgraded security command and control centre at the Sree Padmanabhaswamy temple here on Wednesday.
Story first published: Thursday, February 12, 2015, 8:31 [IST]