மக்களின் தொடர்பு எல்லைக்கு வெளியே மோடி அரசு.. கேஜ்ரிவால் குற்றச்சாட்டு
ரூபாய் நோட்டுக்கள் விவகாரத்தில் மக்களுடனான தொடர்பை மத்திய அரவு இழந்துவிட்டது என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி: ரூபாய் நோட்டுக்கள் செல்லாத அறிவிப்பை திரும்பப் பெற இயலாது என மத்திய அரசு கூறியிருப்பது அது மக்களுடனான தொடர்பை இழந்துவிட்டதையே காட்டுவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை திரும்பப் பெறுவது குறித்து உரிய பரிசீலனையும், ஆய்வும் செய்யாமலே வெறுமனே மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி மறுத்திருப்பது தமக்கு மிகவும் கவலையை ஏற்படுத்தி இருப்பதாக கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மக்களுடனான தொடர்பை இழந்துவிட்டது என்றும் அவர் குற்றம் சுமத்தினார். இத்தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் கெஜ்ரிவால் பதிவிட்டுள்ளார்.
ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை மூன்று நாட்களுக்குள் திரும்பப் பெறாவிட்டால் வீதியில் இறங்கி போராடுவோம் என்று டெல்லி, மேற்கு வங்க முதலமைச்சர்களான கெஜ்ரிவாலும், மம்தா பானர்ஜியும் வியாழக்கிழமை அறிவித்தனர்.
இதற்கு உடனடியாக பதில் அளித்த மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்ததை திரும்பப் பெறும் திட்டம் எதுவும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், இந்த விவகாரத்தில் கெஜ்ரிவாலும், மம்தாவும் மக்களிடையே பீதியை கிளப்புவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 8-ம் தேதி நள்ளிரவு முதல் 500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அதிரடியாக அறிவித்தது. அன்றைய தினம் முதல் நாடுமுழுவதும் மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications