பெங்களூரில் மட்டும் 170 ஜெர்மனி நிறுவனங்கள்: மெர்க்கல் பெருமிதம்-மோடி மகிழ்ச்சி
பெங்களூர்: பெங்களூரில் சுமார் 170 ஜெர்மனி நிறுவனங்கள் இருப்பது இரு நாடுகளுக்கு இடையேயான உறவு பற்றி தெரிவிக்கிறது என்று ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெரிக்கல் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் இன்று நடைபெற்ற நாஸ்காம் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இந்தியா, ஜெர்மனியை சேர்ந்த தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய மெர்க்கல் கூறுகையில்,
பெங்களூரில் சுமார் 170 ஜெர்மனி நிறுவனங்கள் இருப்பது இரு நாடுகளுக்கு இடையேயான உறவு பற்றி தெரிவிக்கிறது. டிஜிட்டல் மயமாக்கல், உள்கட்டமைப்பு, எரிசக்தி வினியோகம் உள்ளிட்டவற்றில் நம் நாடுகளுக்கு சிறந்த வாய்ப்பு உள்ளது என்றார்.
இதையடுத்து பேசிய மோடி கூறுகையில்,
முதலீட்டாளர்களுக்கு ஏற்ற இடமாக இந்தியா உள்ளது. நாங்கள் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். நாடாளுமன்றத்தில் ஜிஎஸ்டி மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளோம். அதை 2016ம் ஆண்டு அமல்படுத்துவோம். இந்தியாவின் வளர்ச்சி அதிகரிக்கும் என்று உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் கணித்துள்ளன.
கடந்த 15 மாதங்களில் உலக மேடையில் இந்தியாவின் நன்பகத்தன்மையை மீட்டுள்ளோம். முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்முனைவோரின் கண்டுபிடிப்புகளின் உரிமங்களை பாதுகாப்போம் என்று வாக்குறுதி அளிக்கிறேன்.
ஐ.டி. புரட்சியின் விளிம்பில் உள்ளோம். வெளியில் இருந்து திறமை, தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டை ஏற்க இந்தியா தயாராக உள்ளது. அதனால் தான் மேக் இன் இந்தியா திட்டம் வலுப்பெறுகிறது என்றார்.
-
பிரதமர் மோடி மக்களுக்கு மீண்டும் ஒரு வேண்டுகோள்.. கங்காநகர் தெரியுமா? இந்தியாவை மிரட்டும் ஒரு விஷயம் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications