நம்பிக்கை என்ற பெயரில் நடக்கும் வன்முறையை சகிக்கமுடியாது - பிரதமர் மோடி
பிரதமர் மோடி மான்கீ பாத் உரையில், நம்பிக்கை என்ற பெயரில் நடக்கும் வன்முறைகளை சகித்துக்கொள்ள முடியாது என எச்சரிக்கும் வகையில் கூறியுள்ளார்.
டெல்லி: நம்பிக்கை என்ற பெயரில் நடக்கும் வன்முறைகளை சகித்துக்கொள்ள முடியாது என மான்கீ பாத் உரையில் பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.
இன்று காலை வானொலியில் பிரதமர் மோடி 'மான்கீ பாத்' உரையாற்றினார். அதில் பிரதமர் மோடி கேரள மக்களுக்கு ஓணம் பண்டிகை வாழ்த்தைத் தெரிவித்தார். அதன்பிறகு நம்பிக்கை என்ற பெயரில் நாட்டில் நடக்கும் வன்முறைகளை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது என கூறினார்.

கடந்த மூன்று நாட்களாக பஞ்சாப், சண்டிகர் மாநிலங்களில் சாமியார் ராம் ரஹீம் சிங்கின் பக்தர்கள் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வன்முறையில் இதுவரை 36 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 250க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வன்முறை வழக்கை விசாரித்த பஞ்சாப் - ஹரியானா உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சத்யா பால் ஜெயின் ஆஜரானார்.
அப்போது அவர், இது மாநில அரசின் பிரச்சனை என தன் வாதத்தில் குறிப்பிட்டார். இதனால் கோபமடைந்த நீதிமன்றம், பிரதமர் மோடி மொத்த இந்தியாவுக்கும் பிரதமர். பாஜகவுக்கு மட்டும் அவர் பிரதமர் அல்ல என கடுமையான கோபத்துடன் குறிப்பிட்டார். இந்நிலையில், பிரதமர் மோடி மான்கீ பாத் உரையில் வன்முறையை சகித்துக்கொள்ள முடியாது என கூறியது குறிப்பிடத்தக்கது.
-
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications