விவசாயிகள் போராட்டம்.. கொந்தளிப்பில் ம.பி.. உண்ணாவிரதத்தில் உட்கார்ந்த முதல்வர்!
போபால்: மத்தியப் பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி 6 பேரை போலீஸார் சுட்டுக் கொன்ற நிலையில் அமைதி திரும்பக் கோரி இன்று அங்கு மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளகான் அமைதி உண்ணாவிரதம் தொடங்கியுள்ளார்.
பாஜக ஆட்சியின் கீழ் உள்ளது மத்தியப் பிரதேசம். இங்குள்ள மான்ட்சார் நகரில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தை ஒடுக்க போலீஸார் முரட்டுத்தனமாக நடவடிக்கையில் இறங்கினர். இதில் துப்பாக்கிச் சூடும் நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 6 விவசாயிகள் கொல்லப்பட்டனர்.

இது பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. மாநிலம் முழுவதும் போராட்டம் பரவியுள்ளது. இதனால் பதட்டம் நிலவி வருகிறது. மத்திய படையினரும் மத்தியப் பிரதேசத்தில் முகாமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் மாநிலத்தில் அமைதி திரும்ப வேண்டி இன்று உண்ணாவிரதம் இருக்கப் போவதாக முதல்வர் செளகான் அறிவித்தார். அதன்படி தசரா மைதானத்தில் இன்று உண்ணாவிரதத்தில் அவர் குதித்தார். உண்ணாவிரதப் பந்தலில் அமர்ந்தபடியே தனது அரசு வேலைகளையும் செய்து வருகிறார் செளகான்.
முதல்வரே உண்ணாவிரதம் இருப்பதால் ம.பியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதல்வர் உண்ணாவிரதம் இருக்கும் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications