நெருங்கும் தீபாவளி... ஒரு மாதம் பட்டாசு வெடிக்கத் தடை விதித்த மும்பை போலீஸ்!
மும்பை: அடுத்த ஒரு மாதத்திற்கு, அதாவது நாளை (நவம்பர் 2) முதல் டிசம்பர் 1-ந் தேதி வரை இரவு 10 மணிக்கு மேல் பட்டாசு வெடிக்க மும்பை போலீசார் தடை விதித்துள்ளனர்.
இன்னும் சரியாக 10 தினங்களில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றாலே புத்தாடை, பலகாரங்களைப் போலவே பட்டாசுகளும் இன்றியமையாதது. பட்டாசு வெடித்து மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.
இந்நிலையில் மும்பை போலீசார் பட்டாசு வெடிக்க மக்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

குடியிருப்புகளுக்கு மேலே....
யாரும் பட்டாசுகளை தீயில் இட்டு எரித்து விளையாடக்கூடாது. 20 அடிக்கு மேல் நீளமான சர வெடிகளை வெடிக்க கூடாது. ராக்கெட், தீ பலூன்களை குடியிருப்புகளுக்கு மேல் பறக்க விடக்கூடாது.

சைலண்ட் சோன்...
மேலும் மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், நீதிமன்றங்கள் மற்றும் சைலன்ட் சோன் என அறிவிக்கப்பட்ட பகுதிகளில் பட்டாசு வெடிக்க கூடாது. 125 டெசிபலுக்கு மேல் ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது. 105 டெசிபலுக்கு மேல் ஒலி எழுப்பும் சரவெடிகளை வெடிக்க கூடாது.

தடை...
இதேபோல் நாளை (திங்கட்கிழமை) முதல் டிசம்பர் 1-ந் தேதி வரை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசு வெடிக்க கூடாது.

நடவடிக்கை...
போலீசாரின் இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.












Click it and Unblock the Notifications