நேருவுக்கும் என் அம்மாவுக்குமான உறவு என்ன தெரியுமா.. விவரிக்கும் மவுண்ட்பேட்டன் மகள்
நேருவுக்கும் தமது தயாருக்குமான உறவு பற்றி நாட்டின் கடைசி வைசிராய் மவுண்ட்பேட்டன் மகள் பமிலா ஹிக்ஸ் விவரித்துள்ளார்.
டெல்லி: முன்னாள் பிரதமர் ஜஹவர்லால் நேருவுக்கும் தமது தாயாருக்குமான உறவு பற்றி நாட்டை ஆண்ட இங்கிலாந்தின் கடைசி வைசிராய் மவுண்ட்பேட்டன் பிரபுவின் மகள் பமிலா ஹிக்ஸ் விவரித்துள்ளார்.
நேருவுக்கும் மவுண்ட்பேட்டன் மனைவி எட்வினாவுக்கும் நெருக்கமான உறவு இருந்தது என்கிறது வரலாற்று பக்கங்கள், புகைப்படங்கள்.. இந்த உறவு பற்றி மவுண்ட்பேட்டன் மகள் பமிலா ஹிக்ஸ் 'டாட்டர் ஆப் எம்பயர்: லைப் அஸ் அ மவுண்ட் பேட்டன்' என்ற புத்தகத்தில் எழுதியுள்ளதாவது:
என்னுடைய தந்தை மவுண்ட்பேட்டன் இந்தியாவின் வைசிராயாக நியமிக்கப்பட்ட போது எனக்கு வயது 17. நாங்கள் இந்தியா வந்தபோது நேருவுக்கும் என்னுடைய தாய்க்கும் இடையே ஆழமான உறவு இருந்தது.

கடிதங்கள்
இந்த உறவை பற்றி நிறையவே தெரிந்து கொள்ள விரும்பினேன். என் தாயாருக்கு நேரு எழுதிய கடிதங்கள் அனைத்தையும் படித்தேன். தாய் எட்வினா மீது நேரு கொண்டிருந்த ஆழமான நேசிப்பை அதில் புரிந்து கொண்டேன்.

உடல்ரீதியாக?
நேருவுக்கும் என் தாயாருக்கும் இடையே உடல் ரீதியாக தொடர்பு இருந்திருக்குமோ என்றெல்லாம் கூட அறியும் ஆவல் எனக்கு இருந்தது. ஆனால் அப்படியான ஒரு உறவு இருவருக்கும் இடையே இருந்திருக்காது என உறுதியாகவும் நம்பினேன்.

வாய்ப்பு இல்லை
இருவரும் தனிமையில் இருந்தனர் என்பது மிகவும் அரிதானது. எப்போதுமே இருவரையும் சுற்றி பணியாளர்கள், பாதுகாப்பு தரப்பினர் என ஏராளமானோர் இருந்தனர்.

மரகத கல் மோதிரம்
நாங்கள் இந்தியாவை விட்டு புறப்படும்போது, நேருவுக்கு என் தாய் எட்வினா ஒரு மரகத கல் மோதிரத்தை பரிசாக தர விரும்பினார். ஆனால் நேரு இதை ஏற்கமாட்டார் என்பதையும் அறிந்திருந்தார்.

இந்திராவிடம்
அதனால் நேருவின் மகள் இந்திராவிடம் அந்த அன்பு பரிசை கொடுத்தார். அப்போது, எல்லோருக்கும் பணத்தை வாரி வழங்கும் நேருவுக்கு பொருளாதார பிரச்சனை வந்தால் இந்த மோதிரத்தை விற்று பணம் தந்துவிட இந்திராவிடம் எட்வினா அறிவுறுத்தியிருந்தார்.
இவ்வாறு மவுண்ட்பேட்டன் மகள் பமிலா ஹிக்ஸ் தமது புத்தகத்தில் எழுதியுள்ளார்.
-
"AI தயாரித்த ரிப்போர்ட் போல உள்ளது.." கீழடி அறிக்கையை திருத்த சொன்ன மத்திய அரசுக்கு அமர்நாத் பதிலடி -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications