நிர்பாயா வழக்கில் இதுவரை நடந்தது என்ன?
நாட்டையே உலுக்கிய நிர்பாய பாலியல் பலாத்கார வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை உறுதி செய்துள்ளது. இதுவரை நடந்த என்ன ஒரு பார்வை…
டெல்லி: நாட்டையே உலுக்கிய நிர்பயா பலாத்கார சம்பவத்தில், மரண தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம், நால்வருக்கும் தூக்கு தண்டனையை இன்று உறுதி செய்தது.
இந்த வழக்கு கடந்து வந்த பாதை இதோ...
• டிசம்பர் 29, 2012: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி சிங்கப்பூர் மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.
• மார்ச் 11, 2013: முக்கிய குற்றவாளியான ராம் சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.
• ஆகஸ்டு 31, 2013: இளங்குற்றவாளியின் குற்றத்தை உறுதி செய்த சிறுவர்களுக்கான நீதிமன்றம் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
• செப்டம்பர் 13, 2013: 4 குற்றவாளிகளுக் விரைவு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
• ஜுன் 2, 2014: மரண தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு
• டிசம்பர் 18, 2015: டெல்லி உயர்நீதிமன்றம் இளங்குற்றவாளிக்கு 3 ஆண்டிற்கு பின் விடுதலை ஆவதை நிறுத்த முடியாது என்று கூறியது.
• ஏப்ரல் 3, 2016: இந்த வழக்கு 19 மாதத்திற்கு பின்னர் நீதிபதிகள் தீபாக் மிஸ்ரா, கோபாலா கவுடா மற்றும் குரியன் ஜோசப் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது
• செப்டம்பர் 2, 2016: வழக்கறிஞர் எம்.எல். ஷர்மா அவரது வாதத்தை முடித்தார்.
• செப்டம்பர் 16, 2016: இந்த வழக்கை விசாரித்த அப்போதைய டெல்லி போலீஸ் கமிஷனர் சாயா ஷர்மா கோர்டில் ஆஜர்.
• நவம்பவர் 7, 2016: மரண தண்டனையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற தங்களது வாதத்தை மூத்த வழக்கறிஞர் ராஜூ ராமசந்திரன் நிறைவு செய்தார்.
• மார்ச் 6, 2017: அனைத்துக் குற்றவாளிகளும் கூடுதல் பிரமாணப் பத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
• மார்ச் 27, 2017: ஓராண்டு விசாரணையை முடித்த உச்ச நீதிமன்றம், தீர்ப்பை ஒத்தி வைத்தது.
• மே 5, 2017: இன்று உச்சநீதிமன்றம் 4 பேருக்குமான மரண தண்டனை யை உறுதி செய்தது.'