மும்பையில் பந்த் தீவிரம்.. டப்பாவாலாக்கள் பணி பாதிப்பு.. ஆபீஸ் போனவர்கள் சாப்பாட்டுக்கு தவிப்பு
Recommended Video

மும்பை: மஹாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள, பீமா கோரேகாவ்ன் என்ற பகுதியில், 1818ம் ஆண்டு நடந்த போரில், மகர் எனப்படும் தலித் இனத்தவர்கள், பிராமண பேஷ்வா படையை தோற்கடித்தனர்.
அந்த போரின் 200வது வெற்றி விழா கொண்டாட்டத்தின் போது, தலித் மக்களுக்கும், மராத்தா இன மக்களுக்கும் இடையே மோதல் வன்முறையாக மாறியுள்ளது.
ஓர் இளைஞர் உயிரிழந்ததை தொடர்ந்து, இந்த வன்முறை சம்பவம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவியது. மும்பையில் நேற்று ரயில் சேவை 3 மணி நேரத்திற்கும் மேல் பாதிக்கப்பட்டது. இன்று மகாராஷ்டிராவில் மாநிலம் தழுவிய பந்த் நடைபெறுகிறது.

டப்பாவாலாக்கள் பணி
இதனால் மும்பையிலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் அலுவலகம் செல்வோர் பெரிதும் நம்பியிருப்பது டப்பாவாலாக்களைத்தான். வீடுகளில் இருந்து மதியம் சாப்பாட்டை பெற்றுக்கொண்டு ரயில்களில் பயணித்து, அலுவலகங்களில் அந்த சாப்பாட்டு பாக்ஸ்களை உரியவர்களிடம் ஒப்படைப்பது டப்பாவாலாக்கள் பணி.

டப்பா வாலாக்கள் பணி பாதிப்பு
மும்பையில் நிறுவனங்களில் பணியாற்றும் நடுத்தர மற்றும் உயர் தட்டு மக்களின் உணவு தேவைகளை இவர்களே பூர்த்தி செய்கிறார்கள். ஆனால் இன்று இவர்கள் பணிக்கு செல்லவில்லை.

சாப்பாடு கொண்டு போக முடியாது
டப்பாவாலாக்கள் சங்கத்தினர், இன்று சப்ளையை நிறுத்த முடிவு செய்துள்ளனர். சங்கத்தின் தலைவர் சுபாஷ் தலேகர் கூறுகையில், "பந்த் நேரத்தில் சாப்பாட்டை கொண்டு உரிய நேரத்தில் சேர்ப்பது இயலாத காரியம் என்பதால் இன்று நாங்கள் அதை செய்யவில்லை" என்றார்.

போலீஸ் குவிப்பு
மும்பையில் பஸ் மற்றும் ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படலாம் என்று கருதப்படுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நேற்று சில இடங்களில் பஸ்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள் அரங்கேறியிருந்தன.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications