அண்ணா சாலை புரட்சி வெற்றி.. சென்னை ஐபிஎல் போட்டிகள் புனேக்கு மாற்றம்!
காவிரி வாரியம் அமைக்கக் கோரி போராட்டம் நடந்து வருவதால் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்படவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
Recommended Video

டெல்லி: காவிரி வாரியம் அமைக்கக் கோரியும் ஐபிஎல்லுக்கு எதிராகவும் தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்து வருவதால் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படாது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
காவிரி மேலாண்மை வாரியத்துக்காக தமிழகமே கொழுந்துவிட்டு எரியும் நிலையில் சோறுக்கு பதில் ஸ்கோர் தேவையா என கேட்டு ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்த எதிர்ப்பு வலுத்தது.
இந்நிலையில் நேற்று அண்ணா சாலையே ஸ்தம்பித்துவிட்டதால் வீரர்களும், ரசிகர்களும் மைதானத்தை வந்தடைவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் போட்டி நடைபெறுமா என்ற சந்தேகத்திற்கு இடையில் சேப்பாக்கம் மைதானத்தில் போட்டிகள் நடைபெற்றன.

நடக்கவிடமாட்டோம்
மைதானத்தில் நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்டோர் காலணிகளை வீசியதாக கூறப்படுகிறது. இதனிடையே வரும் 20-ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றொரு அணியுடன் நடைபெறும் போட்டி நடைபெறாது, நடக்கவிடமாட்டோம் என்று தமிழ் அமைப்புகளும் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

போட்டி நடைபெறுமா
20-ஆம் தேதி நடைபெற போட்டிக்கான டிக்கெட் விற்பனைகள் நாளை நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் ஐபிஎல்லுக்கு பலத்த எதிர்ப்பு இருப்பதால் அந்த போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் இருந்தது.

மொத்தம் 7 போட்டிகள்
இந்நிலையில் டெல்லியில் பிசிசிஐ மற்று்ம ஐபிஎல் நிர்வாகம் ஆலோசனை நடத்தியது.
இதில் ஐபிஎல் போட்டிகளை சென்னையிலிருந்து வேறு மாநிலத்துக்கு மாற்றலாம் என முடிவு எடுக்கப்பட்டது. எனவே சென்னையில் நடத்த திட்டமிட்ட மொத்தம் 7 போட்டிகளில் நேற்று ஒன்று நடந்துவிட்டது.

எந்த மாநிலத்தில்...
மீதமுள்ள 6 போட்டிகள் வேறு மாநிலத்துக்கு மாற்றுவது என்று ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. புனேயில் போட்டியை நடத்தத் தயாராக உள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் கூறியுள்ளது. இதற்கு சிஎஸ்கே அணியும் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிகிறது
-
வைபவ் சூர்யவன்ஷிக்கு சச்சின் கொடுத்த 'சர்டிபிகேட்'! இளம் புயலின் பேட்டிங் ரகசியத்தை உடைத்த மாஸ்டர்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications