பெங்களூர் ஐடி நிறுவனங்களில் கன்னடர்களுக்கு அதிக வேலைகள் தராதது ஏன்?.. குமாரசாமி!
பெங்களூர்: பெங்களூரில் உள்ள தகவல் தொழில்நுட்பங்களில் 80 சதவீதம் பேர் வெளி மாநிலக்காரர்களாக உள்ளனர். 20 சதவீதம் பேர்தான் கன்னடர்களாக உள்ளனர் என்று கொதித்துள்ளார் முன்னாள் கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமி.
பெங்களூருக்கு உயிர் நாடியாக இருப்பது இந்த ஐடி நிறுவனங்கள்தான்.
ஆனால் இங்கு கன்னடர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகள் தரப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை குமாரசாமி முன்வைத்துள்ளார்.

ஏன் கன்னடர்களுக்கு வேலை தருவதில்லை
இதுகுறித்து குமாரசாமி கூறுகையில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் 80 சதவீதம் பேர் கன்னடர் அல்லாதவர்கள்தான். 20 சதவீதம் பேர் மட்டுமே கன்னடர்கள். ஏன் கன்னடர்களுக்கு இவர்கள் வேலை தருவதில்லை...

சலுகைகளை மட்டும் வாங்கிக் கொண்டு
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் குடிநீர், மின்சாரம், நிலம், மானியம் என சலுகைகளை அதிக அளவில் பெறுகின்றன. ஆனால் வேலையை மட்டும் கன்னடர் அல்லாதவர்களுக்குத் தூக்கிக் கொடுக்கிறார்கள்.

கன்னடர்களுக்கு என்னதான் உள்ளது
இப்படி பிற மொழிக்காரர்களுக்கு அனைத்தையும் கொடுத்து விட்டு, மண்ணின் மைந்தர்களான கன்னடர்களுக்கு என்னதான் கொடுக்கிறார்கள் இவர்கள்...என்றார் கோபமாக.

எல்லாத்துக்கும் நான் தான் காரணம்-கெளடா
இதற்கிடையே, குமாரசாமியின் தந்தையும், முன்னாள் பிரதமருமான தேவெ கெளடா கூறுகையில், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்தான், அதிலும் எஸ்.எம்.கிருஷ்ணா முதல்வராக இருந்தபோதுதான் இத்தனை ஐடி நிறுவனங்களையும் பெங்களூருக்கு அழைத்து வந்தார் என்பது தவறு. நான் தான் அதற்கான அனுமதியைத் தந்து, நிலங்களையும் ஒதுக்கினேன். ஐடி பூங்காக்களுக்கு அனுமதி தந்தேன். 10 வருடத்திற்கு வரி விலக்கு அளித்தேன் என்றார் அவர்.

ஏன் இப்படிப் பேசுறாங்க ரெண்டு பேரும்...
திடீரென கெளடாவும், அவரது மகனும் ஐடி நிறுவனங்கள் மீது பாய்ந்திருப்பதற்கு வரப் போகும் லோக்சபா தேர்தலை காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இப்படிப் பேசினால்தான், கன்னட வாக்குகளைக் கவர முடியும் என்று இருவரும் பேசுவதாகவும் பலமாக சந்தேகிக்கப்படுகிறது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications