வாக்கு வேட்டைக்கு காங். இன்னொரு அதிரடி.. 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஊதியம் உயர்த்தப்படுகிறது!!
டெல்லி: லோக்சபா தேர்தலில் வாக்காளர்களை கவரும் வகையில் மற்றொரு அதிரடியாக 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட ஊதியத்தை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.
2009 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு கை கொடுத்ததில் முக்கிய பங்கு வகித்ததாக கருதப்படுவது 100நாள் வேலை வாய்ப்பு திட்டம்தான். இத்திட்டம் கிராமப்புற ஏழை மக்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றதால் கணிசமான வாக்குகளை காங்கிரசால் அறுவடை செய்ய முடிந்தது.

தற்போது அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கெனவே உணவு பாதுகாப்பு மசோதா, நிலம் கையகப்படுத்துதல் மசோதா உள்ளிட்ட பல திட்டங்களை காங்கிரஸ் அரசு அறிவித்திருக்கிறது.
நடப்பாண்டில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ரூ33 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியிருக்கிறது. இந்நிலையில் கடந்த தேர்தலில் கை கொடுத்த 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை சீரமைத்து ஊதியத்தை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்காக தேசிய புள்ளிவிவர கமிஷன் தலைவர் பிரோணப் சென் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டிருந்தது. அக்குழு தற்போது கலைக்கப்பட்டிருக்கிறது.
அத்துடன் இந்திரா காந்தி தேசிய வளர்ச்சி நிறுவனத்தின் துணை வேந்தர் மகேந்திர தேவ் தலைமையில் புதிய குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இக்குழுவை 3 மாதத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதன் மூலம் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றுவோருக்கான ஊதியம் கணிசமாக உயர உள்ளது.
ஊதிய உயர்வுடன் கணிசமான வாக்கு வேட்டையும் நடக்கும்!!
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications