ஜம்மு காஷ்மீர்: மோடி நடத்திய பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தார் ஒமர் அப்துல்லா
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநில பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக அம்மாநிலத்தில், பிரதமர் நரேந்திரமோடி தலைமையில், இன்று நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா புறக்கணித்தார்.
ஜம்மு காஷ்மீருக்கு ஒரு நாள் பயணமாக இன்று காலை வருகை தந்தார் பிரதமர் நரேந்திரமோடி. டெல்லியில் இருந்து ஜம்முவிற்கு விமானத்தில் வந்திறங்கிய, நரேந்திரமோடி அங்கிருந்து கட்ரா பகுதிக்கு சென்றார். அங்கு கட்ரா-உதம்பூர்-டெல்லி ரயில்சேவையை துவங்கி வைத்தார். இதையடுத்து ஸ்ரீநகர் சென்ற நரேந்திரமோடி அங்கு, பாதாமிபாக் கண்டோன்மென்ட் பகுதியில் ஜம்மு காஷ்மீர் மாநில பாதுகாப்பு குறித்து உயர் மட்ட ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், மாநில ஆளுநர் என்.என்.வோரா, வடக்கு மண்டல ராணுவ கமாண்டன்ட் டி.எஸ்.ஹூண்டா, லெப்டினன்ட் ஜெனரல்கள் கே.எச்.சிங், சுப்ரதா ஷா, நேகி, உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர். ஆனால், மாநில முதல்வரான ஒமர் அப்துல்லா இதில் பங்கேற்கவில்லை.
நாடாளுமன்ற தேர்தலின்போது, நரேந்திரமோடிக்கு எதிராக, தீவிர பிரச்சாரம் செய்தவர் ஒமர் அப்துல்லா. சமீபத்தில்கூட, பாஜகவுக்கு சவால்விடும் வகையில் பேசிய அவர், நடைபெற உள்ள ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் பாஜக தனித்து வெற்றி பெற்றால் நான் அரசியலைவிட்டே விலகிவிடுவேன் என்றார். எனவே மோடியைவிட்டு சற்று விலகி இருக்கவே ஒமர் அப்துல்லா விரும்புகிறார். இதன் காரணமாக பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தை அவர் புறக்கணித்துவிட்டதாக கூறப்படுகிறது.
அதே நேரம் கட்ரா ரயில் இயக்க துவக்க நிகழ்ச்சியில் ஒமர் அப்துல்லா பங்கேற்றார். மோடிக்கு மலர் கொத்து கொடுத்து அவர் வரவேற்றார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications