எல்லையில் ஊடுருவத் தயார் நிலையில் 1,000 தீவிரவாதிகள்... இந்திய ராணுவ அதிகாரி எச்சரிக்கை
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர் எல்லையில் ஊடுருவ சுமார் ஆயிரம் தீவிரவாதிகள் தயார் நிலையில் உள்ளதாக இந்திய ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரின் கவினி கிராமத்தில் பாதுகாப்பு படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதி ஒருவன், திடீரென அவர்கள் மீது தாக்குதல் நடத்தினான்; பாதுகாப்பு படையினரின் பதில் தாக்குதலில் அந்த தீவிரவாதி கொல்லப்பட்டான்.

அவன் உடலை கைப்பற்றி, அங்கிருந்த பொருட்களை பறிமுதல் செய்து விசாரித்ததில், அவன், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த, ஜஹாங்கீர் அகமது கனி என்பது தெரிய வந்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர் ஸ்ரீநகரில் தீவிர ரோந்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ராணுவ உயர் அதிகாரி, லெப்டினன்ட் ஜெனரல் சதீஷ் துவா கூறியதாவது... பாகிஸ்தான், தீவிரவாதிகளின் புகலிடமாக திகழ்கிறது. அந்நாட்டு ராணுவத்தின் உதவியுடன், ஆயிரக்கணக்கான தீவிரவாதிகள், முகாம்கள் அமைத்து ஆயுதப் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்தியா - பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பாகிஸ்தானுக்கு சொந்தமான பகுதிகள் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகிய இடங்களில், 1,150 பயங்கரவாதிகள் நம் நாட்டின் மீது தாக்குதல் நடத்த தயார் நிலையில் உள்ளனர்.
பாகிஸ்தானில், 17 தீவிரவாத முகாம்களில் ஆயிரக்கணக்கான தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்களில், 325 பேர், எந்த நேரத்திலும் நம் நாட்டில் நுழையும் அபாயம் உள்ளது. தீவிரவாதிகள் பலமுறை ஊடுருவ முயன்றும், நம் வீரர்களின் பதிலடியால், அவர்கள் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, அங்கிருந்தபடியே, ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். தீவிரவாதத்தை ஆதரிப்பது மட்டுமின்றி, தீவிரவாதிகளுக்கு ஆயுதப் பயிற்சி அளித்து, இந்தியாவிற்கு எதிரான சதிச் செயல்களில் ஈடுபடச் செய்யும் பணியில், பாகிஸ்தான் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications