எல்லையில் ஊடுருவத் தயார் நிலையில் 1,000 தீவிரவாதிகள்... இந்திய ராணுவ அதிகாரி எச்சரிக்கை
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர் எல்லையில் ஊடுருவ சுமார் ஆயிரம் தீவிரவாதிகள் தயார் நிலையில் உள்ளதாக இந்திய ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரின் கவினி கிராமத்தில் பாதுகாப்பு படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதி ஒருவன், திடீரென அவர்கள் மீது தாக்குதல் நடத்தினான்; பாதுகாப்பு படையினரின் பதில் தாக்குதலில் அந்த தீவிரவாதி கொல்லப்பட்டான்.

அவன் உடலை கைப்பற்றி, அங்கிருந்த பொருட்களை பறிமுதல் செய்து விசாரித்ததில், அவன், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த, ஜஹாங்கீர் அகமது கனி என்பது தெரிய வந்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர் ஸ்ரீநகரில் தீவிர ரோந்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ராணுவ உயர் அதிகாரி, லெப்டினன்ட் ஜெனரல் சதீஷ் துவா கூறியதாவது... பாகிஸ்தான், தீவிரவாதிகளின் புகலிடமாக திகழ்கிறது. அந்நாட்டு ராணுவத்தின் உதவியுடன், ஆயிரக்கணக்கான தீவிரவாதிகள், முகாம்கள் அமைத்து ஆயுதப் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்தியா - பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பாகிஸ்தானுக்கு சொந்தமான பகுதிகள் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகிய இடங்களில், 1,150 பயங்கரவாதிகள் நம் நாட்டின் மீது தாக்குதல் நடத்த தயார் நிலையில் உள்ளனர்.
பாகிஸ்தானில், 17 தீவிரவாத முகாம்களில் ஆயிரக்கணக்கான தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்களில், 325 பேர், எந்த நேரத்திலும் நம் நாட்டில் நுழையும் அபாயம் உள்ளது. தீவிரவாதிகள் பலமுறை ஊடுருவ முயன்றும், நம் வீரர்களின் பதிலடியால், அவர்கள் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, அங்கிருந்தபடியே, ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். தீவிரவாதத்தை ஆதரிப்பது மட்டுமின்றி, தீவிரவாதிகளுக்கு ஆயுதப் பயிற்சி அளித்து, இந்தியாவிற்கு எதிரான சதிச் செயல்களில் ஈடுபடச் செய்யும் பணியில், பாகிஸ்தான் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications