பாகிஸ்தானுக்கு வந்தா ரத்தம்.. இந்தியாவுக்கு வந்தா தக்காளி சட்னியா?
டெல்லி: தீவிரவாத தாக்குதல்களுக்கு பல உயிர்களை பலிகொடுத்துவிட்ட இந்தியா அதற்கு காரணமான தீவிரவாதிகளை ஒப்படைக்குமாறு கேட்டபோது மறுப்பு தெரிவித்த பாகிஸ்தான், இப்போது பெஷாவர் தாக்குதலுக்கு காரணமான தெரிக் ஐ தாலிபான் தீவிரவாத இயக்க தலைவன் மவுலானா பஸ்லுல்லாவை பிடிக்க ஆப்கானிஸ்தான் உதவியை நாடியுள்ளது.
பெஷாவரில் பள்ளிக் குழந்தைகளை ஈவு, இரக்கமின்றி கொலை செய்த தீவிரவாத இயக்கம் தெரிக் ஐ தாலிபான். இதன் தலைவன் மவுலானா பஸ்லுல்லா, ஆப்கனில் பதுங்கியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் ஷெரிப், நேற்றே ஆப்கானிஸ்தான் சென்றுவிட்டார்.

மவுலானாவை தங்களிடம் ஒப்படைக்கும்படி ஆப்கன் அரசை பாகிஸ்தான் கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் இதேபோன்றதொரு கோரிக்கையை இந்தியா வெகுகாலமாக பாகிஸ்தானிடம் கேட்டுக்கொண்டிருக்கும்போது காது கேளாதவனை போல பாகிஸ்தான் பாசாங்கு செய்து வந்தது.
கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் தீவிரவாதி ஹபீஸ் சையது. லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவரான இவர் தற்போது ஜமாத்-உத்-தவா என்ற மற்றொரு அமைப்பை நடத்தி வருகிறார். இவரை இந்தியாவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து மறுத்து வருகிறது.
அமெரிக்கா, இவரது தலைக்கு 10 மில்லியன் டாலர் விலை நிர்ணையித்துள்ளது. ஆனாலும் அவர் பாகிஸ்தானில் சுதந்திரமாக உலவி வருகிறார். ஹபீஸ் சயீத், அவ்வப்போது இந்தியாவுக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் கருத்துக்களை கூறி வருகிறார்.
1993ம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புள்ளவர் தாவூத் இப்ராஹிம். அவரும் கராச்சியில் சுதந்திரமாக சுற்றித்திரிந்து வருகிறார். 20 வருடமாக கெஞ்சி கேட்டும், தாவூத்தை தருவதாக இல்லை பாகிஸ்தான். ஆனால் இப்போது பெஷாவரில் தாக்குதல் நடந்த மறுநாளே காபூலில் ராணுவ தளபதி சென்றிறங்கியுள்ளார்.
ஒருவேளை இந்திய மண்ணில் சிந்தியது தக்காளி சட்னி என்றும், பாகிஸ்தானில் மட்டுமே ரத்தம் சிதறியுள்ளது என்றும் அந்த நாடு நினைத்துவிட்டது போலும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications