பாக். ராணுவம் அத்துமீறி தாக்கியதில் 3 இந்தியர்கள் பலி: ஊர்களை காலி செய்யும் காஷ்மீர் மக்கள்
ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி ஜம்மு காஷ்மீரில் நடத்திய தாக்குதலில் ஒரு பெண் மற்றும் 2 ராணுவ வீரர்கள் பலியாகினர். மேலும் 10 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. இருப்பினும் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது இந்தியா எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்துவதை வழக்கமாகவே கொண்டுள்ளது. தாக்குதலையும் நடத்திவிட்டு இந்தியாவுடன் நல்லுறவை விரும்புவதாகவும் பாகிஸ்தான் தெரிவித்து வருகிறது.

புத்தாண்டு அன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் உள்ள 13 எல்லைச் சாவடிகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு இந்திய ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் அத்துமீறி இந்திய ராணுவ வீரர்கள் இருக்கும் இடத்தை தாக்கினர். இதில் காயம் அடைந்த வீரர்கள் ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு காஷ்மீர் எல்லையில் உள்ள சம்பா மற்றும் கதுவா மாவட்டங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் சம்பா மாவட்டம் மங்கு சாக் கிராமத்தைச் சேர்ந்த டோஷி தேவி(45) என்ற பெண் மற்றும் 2 ராணுவ வீரர்கள் பலியானார்கள். மேலும் 10 பேர் காயம் அடைந்துள்ளார்கள்.

காயம் அடைந்தவர்கள் ஜம்முவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சர்வதேச எல்லையில் உள்ள ஜம்மு காஷ்மீரின் சம்பா மற்றும் கதுவா மாவட்டத்தில் உள்ள மான்யாரி, பான்சர், போபியா, லோந்தி, சாடிசக், சைலரி, சாச்வல், மங்கு சாக், ரீகால், மாவா, சாதோ, சாக் பாரியா கிராம மக்கள் ஊர்களை காலி செய்துவிட்டு பாதுகாப்பான இடங்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.
இதற்கிடையே பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்ததில் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த 5 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 13 வயது சிறுமி ஒருவரும் பலியாகிவிட்டதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications