பாக். ராணுவம் அத்துமீறி தாக்கியதில் 3 இந்தியர்கள் பலி: ஊர்களை காலி செய்யும் காஷ்மீர் மக்கள்
ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி ஜம்மு காஷ்மீரில் நடத்திய தாக்குதலில் ஒரு பெண் மற்றும் 2 ராணுவ வீரர்கள் பலியாகினர். மேலும் 10 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. இருப்பினும் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது இந்தியா எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்துவதை வழக்கமாகவே கொண்டுள்ளது. தாக்குதலையும் நடத்திவிட்டு இந்தியாவுடன் நல்லுறவை விரும்புவதாகவும் பாகிஸ்தான் தெரிவித்து வருகிறது.

புத்தாண்டு அன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் உள்ள 13 எல்லைச் சாவடிகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு இந்திய ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் அத்துமீறி இந்திய ராணுவ வீரர்கள் இருக்கும் இடத்தை தாக்கினர். இதில் காயம் அடைந்த வீரர்கள் ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு காஷ்மீர் எல்லையில் உள்ள சம்பா மற்றும் கதுவா மாவட்டங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் சம்பா மாவட்டம் மங்கு சாக் கிராமத்தைச் சேர்ந்த டோஷி தேவி(45) என்ற பெண் மற்றும் 2 ராணுவ வீரர்கள் பலியானார்கள். மேலும் 10 பேர் காயம் அடைந்துள்ளார்கள்.

காயம் அடைந்தவர்கள் ஜம்முவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சர்வதேச எல்லையில் உள்ள ஜம்மு காஷ்மீரின் சம்பா மற்றும் கதுவா மாவட்டத்தில் உள்ள மான்யாரி, பான்சர், போபியா, லோந்தி, சாடிசக், சைலரி, சாச்வல், மங்கு சாக், ரீகால், மாவா, சாதோ, சாக் பாரியா கிராம மக்கள் ஊர்களை காலி செய்துவிட்டு பாதுகாப்பான இடங்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.
இதற்கிடையே பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்ததில் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த 5 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 13 வயது சிறுமி ஒருவரும் பலியாகிவிட்டதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications